மேலும் அறிய
Tamilnadu Roundup: கரைபுரண்டு ஓடும் தாமிரபரணி! உருவானது புதிய வளிமண்டல சுழற்சி - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : twitter
- தெற்கு வங்கக்கடலில் உருவானது புதிய வளிமண்டல சுழற்சி; அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை; அதிகபட்சமாக நெல்லை விகே புரத்தில் 18 செ.மீ மழை
- சங்கரன்கோயில் அருகே பாலப்பணிகள் நடைபெறும் இடத்தில் வெள்ளப்பெருக்கு; அடித்துச் செல்லப்பட்டது தற்காலிக தார்ச்சாலை
- கொடைக்கானில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் மண்சரிவு
- கடம்பா நதி, ராமநதி நிரம்பியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றம் – தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
- தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார்
- குற்றாலம் அருவியில் வரலாறு காணாத அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
- உடுமலை பஞ்சலிங்க அருவியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; குளிக்கத் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்
- தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை நோயாளிகள் டிஸ்சார்ஜ்; சிறைச்சாலையில் இருந்த கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
- ஆதார் அட்டையை புதுப்பிக்க இன்றே கடைசி நாள்; காலை முதலே இ சேவை மையங்களில் குவியும் மக்கள்
- சென்னை ராயபுரம் காவல்நிலைய சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
பொது அறிவு





















