மேலும் அறிய

Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது எந்த தேதி வரை தெரியுமா.?

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.

இன்று முடிவடைய இருந்த பயிர் காப்பீட்டு தேதி

டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஆண்டுதோறும் பருவமழை காலங்களில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே(15.11.25) கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், விவசாயிகள் மும்முரமாக பயிர் காப்பீடு செய்து வந்தனர்.

காப்பீடு செய்ய முடியாமல் தவித்த ராமநாதபுரம் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதில், மழை பாதிப்பு, இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்படும் போது, தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை தான் விவசாயிகளுக்கு உதவுகிறது.

இந்நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருவதால், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு சார்ந்த ஆவணங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாக இருந்ததால், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.  இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக, விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதையடுத்து, நெற்பயிர் காப்பீட்டு பதிவு தேதியை நவம்வர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் கோரிக்கை வைத்தார்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்

இத்துடன், பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென பல்வேறு இடங்களிலிருந்தும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் பல காரணங்களால் இன்னும் அதிகளவு விவசாயிகள் காப்பீடு செய்யாமல் உள்ளனர். அதனால் காப்பீடு செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய தமிழ்நாடு அரசு

இப்படிப்பட்ட சூழலில், அனைத்து தரப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 30-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget