மேலும் அறிய

Amarnath Yatra: அமர்நாத் யாத்திரைக்கு சென்று ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்கள்.. வீடியோ வெளியிட்டு முதலமைச்சருக்கு கோரிக்கை..!

அமர்நாத் யாத்திரைக்கு சென்று மீண்டு வர முடியாமல் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் மீட்க உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

அமர்நாத் யாத்திரைக்கு சென்று மீண்டு வர முடியாமல் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் மீட்க உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை 

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். காசிக்கு அடுத்தப்படியாக இந்துக்கள் பெரும்பாலனவர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் நடப்பாண்டுக்கான யாத்திரை கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கியது. 

இதற்காக உருவாக்கப்பட்ட செயலியில் அமர்நாத் யாத்திரை வழித்தடம், தட்பவெப்ப நிலை, ஆன்லைன் சேவை உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றது. 13 முதல் 70 வயதுக்கு உட்பட்ட அனைவரும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்களால் கடந்த ஜூலை 1ஆம் தேதி அமர்நாத் யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. 

காஷ்மீரில் கனமழை 

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மோசமான வானிலை காரணமாக கடந்த ஜூலை 8 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய 2 வழித்தடங்களில் யாத்திரை நிறுத்தப்பட்டு, பக்தர்கள் அடிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து 2 நாட்களுக்குப் பின் சூரியன் தென்பட்டதால் பால்டால் வழித்தடத்தில் மட்டும் யாத்திரை மீண்டும் தொடங்கியது. 

அதேசமயம் மழை காரணமாக பாறைகள் வழுக்கும் நிலை உள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள்  அமர்நாத் யாத்திரைக்காக கடந்த ஜூலை 2 ஆம் தேதி புறப்பட்டு சென்றனர். 8 ஆம் தேதி தரிசனம் முடிந்து திரும்பிய அவர்கள் மழை மற்றும் நிலச்சரிவில் நடுவில் சிக்கி தவித்தனர். பின்னர் ராணுவ வீரர்கள் உதவியுடன் பால்டால் என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அமர்நாத் யாத்திரை சென்று ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் பக்தர்கள் தங்களுக்கு உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முகாமில் கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி சிரமப்படுபவதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget