மேலும் அறிய

TN Breakfast : திராவிட பாரம்பரியத்தின் புரட்சிகர வழித்தோன்றல்.. சமத்துவத்தை போதிக்கும் காலை சிற்றுண்டி திட்டம்..

திமுக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தின் நோக்கமே, கல்வி பயிலும் குழந்தைகள் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது என்பதுதான்.

தங்களின் பள்ளிகளில் வழங்கப்படும் உணவுக்கான செலவை மாணவர்களின் பெற்றோர்களே ஏற்க வேண்டும் என்பதை ஐசிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் கட்டாயமாக்கியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் சமத்துவத்தை போதிக்கும் நோக்கில் இந்த முடிவை பள்ளிகள் எடுத்துள்ளது. இந்த முடிவை பாராட்டுபவர்கள், அரசு பள்ளிகளில் வழங்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விமர்சிக்கின்றனர்.


TN Breakfast : திராவிட பாரம்பரியத்தின் புரட்சிகர வழித்தோன்றல்.. சமத்துவத்தை போதிக்கும் காலை சிற்றுண்டி திட்டம்..

திமுக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தின் நோக்கமே, கல்வி பயிலும் குழந்தைகள் வெறும் வயிற்றில் இருக்கக் கூடாது என்பதுதான். சிற்றுண்டி உண்பதன் மூலம், குழந்தைகளின் தன்னம்பிக்கை பெருகும்.

பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளில் சிலர் உணவு எடுத்து வரும்போது, மற்ற குழந்தைகள் உணவு எடுத்த வரவில்லை என்றால் அவர்களின் மத்தியில் வேறுபாடு உருவாக வாய்ப்புள்ளது. இதை களையவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமத்துவத்தை போதிக்கும் புரட்சிகரமான காலை சிற்றுண்டி திட்டம் என்பது, திராவிட பாரம்பரியம் உலகுக்கு அளித்த மகத்தான பரிசாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சத்துணவு திட்டத்திற்கு நூற்றாண்டு வரலாறு உள்ளது. இந்தத் திட்டம் முழுக்கமுழுக்க மாநில அரசின் நிதியிலேயே செயல்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட நூற்றாண்டு வரலாறு கொண்ட இத்திட்டத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்தியவர் சென்னை மாநகராட்சியின் தலைவர் சர் பிட்டி தியாகராயர் ஆவார்.

உலகின் முதல் மதிய உணவு செப்டம்பர் 16, 1920 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கி, அப்போதைய சென்னை மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான சர் பிட்டி தியாகராயர், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஏழ்மை, அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் 'பெரிய அளவில்' பாதிப்பை ஏற்படுத்தியது என்றார். 

அப்போது, பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இத்திட்டத்தில், மேலும் நான்கு பள்ளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பள்ளிகளின் மொத்த மாணவர் சேர்க்கை 1922-23இல் 811 ஆக இருந்தது. 1924-25இல் 1,671 ஆக உயர்ந்தது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் உணவு வழங்க அனுமதி கேட்கப்பட்டது. 

பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்கக் கல்வி நிதியிலிருந்து செலவினங்களை அனுமதிக்கவில்லை. இதன் மூலம், ஏப்ரல் 1, 1925இல் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 பள்ளிகளில் 1,000 ஏழை மாணவர்களுடன் இத்திட்டம் புத்துயிர் பெற்றது. எழுத்தாளர் ஆர். கண்ணன், ‘அண்ணா: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சி.என். அண்ணாதுரை’ என்ற புத்தகத்தில், சர் பிட்டி தியாகராயரை ‘மதிய உணவு திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கிறார்.

சுதந்திரத்திற்குப் பின் 1957ல் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கே. காமராஜர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆண்டுக்கு 200 நாட்கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1982ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான உணவை உறுதி செய்யும் திட்டத்தை அறிவித்தார். 2-5 வயது மற்றும் 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜூலை 1982 முதல் காப்பீடு வழங்கப்பட்டது. செப்டம்பர் 1982 இல், இந்தத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில், 10-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இது நீட்டிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவித்த முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு, வேகவைத்த முட்டை வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டது. 2010இல், வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 5.7 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர்.

2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப முட்டைகளுடன் பலவகையான உணவுகளைச் சேர்த்தார். சத்துணவுத் திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்பட்டு, தினமும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 

இது 5-9 வயதுக்குட்பட்ட ஆரம்பப்  பிரிவினருக்கும், 10-15 வயதுக்குட்பட்ட உயர் தொடக்கப் பிரிவினருக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள், மொத்தமாக ஒரு வருடத்தில் 210 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான உணவு வழங்கப்படுகிறது. 

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கும் ஒரு வருடத்தில் 312 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான பல்வேறு உணவு வழங்கப்படுகிறது. 


TN Breakfast : திராவிட பாரம்பரியத்தின் புரட்சிகர வழித்தோன்றல்.. சமத்துவத்தை போதிக்கும் காலை சிற்றுண்டி திட்டம்..

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் அரிசியும், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரை) 150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2022 மே மாதம் அரசின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அறிவித்தார்.

தமிழ்நாட்டு அரசு பள்ளிக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய்வழிச் சேவையை வழங்கி வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், “பள்ளியைத் தொடங்கும் பல குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் சிரமங்களாலும் காலை உணவைத் தவறவிடுகிறார்கள். எனவே இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம்” என்றார்.

இலவச காலை உணவு திட்டத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது திருப்திக்கு எல்லையே இல்லை என்றும், இனி தமிழ்நாடு உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது ஒரு கனவுத் திட்டம் என்று கூறிய அவர், ஏழைக் குழந்தைகளின் படிப்பை முழுவதுமாக முடிக்க இந்தத் திட்டம் உதவும் என்றார். 

இது ஒரு திராவிட மாடல் என்று கூறிய அவர், இந்த சிறப்பு திராவிட மாதிரி திட்டத்தை மற்ற அரசுகள் ஏற்றுக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்றார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் வெறும் வயிற்றில் இல்லாமல் வகுப்பிற்கு வருவதை உறுதி செய்வது, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பது, குழந்தைகளிடையே இரத்த சோகை - இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைப்பது, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் பள்ளித் தக்கவைப்பை அதிகரிப்பது, வேலை செய்யும் பெற்றோரை ஆதரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் ரூ. 33.56 கோடி செலவில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கட்டாயமாக உள்ளது. பராமரிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுக்கள் உணவின் தரம் மற்றும் சுவையை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்யும் பொறுப்பில் உள்ளார்கள்.

இத்தகைய முயற்சிகள் மூலம் தமிழ்நாடு அரசு 100 ஆண்டு கால வரலாற்றைக் குறிப்பதோடு, வளர் இளம் குழந்தைகளின் பசியைப் போக்கியதன் மூலம் தாய்வழிப் பராமரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நமது தலைவர்களால் வளர்இளம் பருவத்தினரை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய இலவச காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் ஒரு மைல்கல்லை பதிவு செய்துள்ளார். 

வயிறு நிரம்பியிருப்பதால் குழந்தைகள் சுறுசுறுப்பான மனதுடன் வகுப்பறைக்குள் நுழைய முடியும். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்கள் ஒரு பொக்கிஷம். ஸ்டாலினின் தலைமையில், பள்ளிக் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியை உறுதி செய்வதில் தமிழக அரசு மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

அரோவில்லின் கேலக்ஸி திட்டம் : நகர்ப்புற வனப்பகுதியைச் செழுமையாக்க 10,000 மரக்கன்றுகள் நட முடிவு!
அரோவில்லின் கேலக்ஸி திட்டம் : நகர்ப்புற வனப்பகுதியைச் செழுமையாக்க 10,000 மரக்கன்றுகள் நட முடிவு!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Embed widget