Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
Assembly Secretary Srinivasan : தமிழக சட்டப்பேரவை செயலாளராக இருந்து வரும் சீனிவாசன் இன்று ராஜினாமா செய்துள்ளார். நவம்பர் மாதம் வரை பணி காலம் இருக்கும் நிலையில், முன்னதாக பணியில் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட சபை செயலாளர் சீனிவாசன்
தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளில்ய 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ளவர் சீனிவாசன், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது சட்டசபை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பதவியை ராஜினாமா செய்த சீனிவாசன்
அந்த வகையில் வருகிற இந்தாண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பணியாற்ற கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் புதிதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில், எம்எல்ஏக்கள் பதவியேற்பு, ஆட்சியின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு பக்கபலமாக இருந்தார்.
அந்த வகையில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பதவியேற்ற நிலையில், சட்டசபை விதிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் சீனிவாசன் வழங்கியிருந்தார். இந்த நிலையில் தான் புதிய அரசிற்கும் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சீனிவாசன் முன்னதாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் சீனிவாசன் வழங்கியுள்ளார். இருந்த போதும் சட்டசபை சீனிவாசன் பதவி விலகியதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அடுத்த சட்டசபை செயலாளராக சாந்தி என்பவர் பதவியேற்பார் என கூறப்படுகிறது. இவர் வருகிற ஜூலை மாதத்தோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்தாக தேன் மொழி என்பவர் சட்டசபை செயலாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















