மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தலைக்கவசம் அணியாவிட்டால் இவ்வளவு அபராதம்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இவ்வளவா..? அறிமுகமான புதிய விதி!
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
![தலைக்கவசம் அணியாவிட்டால் இவ்வளவு அபராதம்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இவ்வளவா..? அறிமுகமான புதிய விதி! Tamil Nadu has drastically changed the road traffic rules and imposed new fine amounts தலைக்கவசம் அணியாவிட்டால் இவ்வளவு அபராதம்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இவ்வளவா..? அறிமுகமான புதிய விதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/08e1550db6e4bb9f3b2908a3b8fb28321666251297110571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம்
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர, மூன்று சக்கர வாகனத்தில் பயணி குறிப்பிடும் இடத்திற்கு ஏற்றி செல்ல மறுத்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி அபராதம் எவ்வளவு..?
- போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ. 500, 2ம் முறை ரூ. 1500 அபராதம் விதிக்கப்படும்.
- பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500, 2வது முறையாக அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்.
- மக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் வாகனத்தை ஓட்டுபவருக்கு முதல்முறை ரூ. 1,000, 2வது முறை ரூ.10,000 மும் வசூலிக்கப்படும்.
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும்.
- கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ. 2000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் ரூ. 10,000 வரை விதிக்கப்படும்.
- சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
- ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- தீயணைப்பு வண்டி வாகனங்களுக்கும் வழிவிட மறுத்தாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்
- அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
- ரிஜிஸ்டிரேஷன் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion