மேலும் அறிய

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார் என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல என்றும் சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. சிலர், இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை. இதை பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்.

"சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை"

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. நமது நாட்டின் தனித்துவம் என்னவென்றால் தர்மத்திற்கு, உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார்.

நமது நாட்டில் அதேபோன்று தான் வள்ளலார் பெருமானும் அவதாரத் செய்தார். வேதத்தில் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை என்று. 

ஆங்கில ஆக்கிரமிப்பால் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நமது தத்துவ குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டது.  அந்த காலகட்டத்தில் தான் வள்ளலார் பெருமான் அவதரித்தார். நமது அடையாளத்தையும் தர்மத்தையும் இழந்து இருந்த காலத்தில் ஒருங்கிணைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார்.

தமிழ்நாடு ஆளுநர் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் பல அவதார புருஷர்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் பிரிந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து சென்றுள்ளனர். அதனால் தான் பாரதத்தின் புன்னிய பூமி தமிழ்நாடு. ஆன்மீக பூமி தமிழ்நாடு. என்றைக்கும் இல்லாத போன்று இன்றைய நாளில் வள்ளலாரின் தேவை உலகத்திற்கு அதிகமாக தேவை படுகின்றது. அந்த அளவு உலகம் பிரிந்து கிடக்கின்றது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பல மக்கள் போரால் கொலை செய்யப்படுகின்றனர். வழிகாட்டுதல் இல்லாததால் மன அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர்.

இங்கு மக்களுக்கு போதிய நிம்மதி இல்லை. பொதுமக்கள் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வள்ளலார் நமக்கானவர் மட்டும் அல்ல உலக அமைதிக்கானவர். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் பலநாடுகளால் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி. 

பல நாடுகள் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசிகளை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போட்ட நிலையில் 120 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்து ஜீவகாருண்ய கருணையால் அனுப்பிவைத்தார்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget