![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு
7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
![தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு Tamil Nadu government has issued an action order transferring 7 IPS officers and some other senior police officers தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/629e1e9f22032aa6577030f0707fab56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் பிப்ரவரி 19 ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அதிரடியாக அதிகாரிகள் மற்றப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 17 போலீஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த மகேஷ், ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார். சென்னை அடையாறு காவல் துணை ஆணையராக மகேந்திரன், புதிய தோமையார்மலை காவல் துணை ஆணையராக பிரதீப் நியமிக்கபட்டுள்ளனர்.
அதேபோல், சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக சிவபிரசாத், தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக சி.பி.சக்கரவர்த்தி நியமிக்கபட்டுள்ளனர். என்.குமார், காவல் துணை ஆணையர் சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையராகவும், பா.மூர்த்தி, சென்னை, காவல்துறை துணை ஆணையர், தலைமையகம் மற்றும் நிர்வாகம், தாம்பரம் காவல் ஆணையரகம், மறுபதிவு செய்யப்பட்ட பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக சுப்புலட்சுமியும், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனராக இருந்த பி.பெருமாள்ஆவடி போலீஸ் கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜி.உமல்யாள், கமாண்டன்ட், டிஎஸ்பி IV பட்டாலியன், கோவைப்புதூர், காவல்துறை துணை ஆணையராகவும், ஆவடி காவல் ஆணையரகம், எஸ்.எஸ்.மகேஷ்வரன், காவல் கண்காணிப்பாளர், அமலாக்கத்துறை, மதுரை, காவல்துறை கண்காணிப்பாளர், அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார்.
புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிதாக 8 துணை ஆணையர்கள், போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா 4 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)