![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Stalin Delhi visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. இதற்காகத்தான்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
![CM Stalin Delhi visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. இதற்காகத்தான்.. Tamil Nadu CM MK Stalin to visit Delhi next week to invite PM Modi for opening ceremony of Chess Olympiad 2022 CM Stalin Delhi visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. இதற்காகத்தான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/aeffbbccf81bc0b7d2ea45272be832df1657771481_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு பணிகள் முதலமைச்சர் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். அவர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியை அழைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்:
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட் 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற இருக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)