CM Stalin congrats: கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - கன்னட விருது பெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...
குவெம்பு ராஷ்ட்ரிய புராஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![CM Stalin congrats: கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - கன்னட விருது பெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து... Tamil Nadu Chief Minister Mk Stalin congratulates Kannada award Kuvempu Rashtriya Puraskar -winning writer Imaiyam Know what he said CM Stalin congrats: கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - கன்னட விருது பெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/25/9a51993bf68af5cb0af9cf99e900f76b1669348739688571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமூக நீதி குறித்த புத்தகங்கள் எழுதி வரும் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட விருதான குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வாழ்த்து:
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது,
1994 ஆம் ஆண்டு இவர் எழுதிய கோவேறு கழுதைகள் என்ற நாவல் மூலம் வாசகர்களை தனது வசிய எழுத்துக்களால் கட்டிப்போட்டார். அன்று தொடங்கிய இமயத்தின் எழுத்துப்பயணம் 25 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இவருக்கு கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கிய தோட்ட அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டுக்கு இயல் விருதை வழங்கி கவுரவித்தது. இவரது முதல் நாவலான கோவோறு கழுதைகள் ஆங்கிலத்தில் BEAST OF THE BURDERS என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போட்டது.
மிக மிக எளிமையான மொழி நடையில் அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களின் துன்பங்களை பேசும் நாவல்களை எழுதி வருபவர் இமையம். இந்நிலையில், தற்போது விருது பெற்றுள்ள ராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)