மேலும் அறிய

Ramzan 2023: நாளை தொடங்குகிறது ரமலான் மாத நோன்பு.. தலைமை காஜி அறிவிப்பு!

ரமலான் பிறை இன்று வானில் தெரிந்ததும் நாளை முதல் 30 நாள் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி கூறியுள்ளார்.

ரமலான் பிறை இன்று வானில் தெரிந்ததும் நாளை முதல் 30 நாள் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் மாத்ததின் போது இஸ்லாமியர்கள் 30 நாள் நோன்பு கடைபிடித்து ஈகை திருநாளை கொண்டாடுவார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், "ரமலான் மாதப்பிறை நேற்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

30 நாள் நோன்பில் பல்வேறு விஷயங்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு காலத்தில் சுய கட்டுப்பாடு, பசி, தாகம், புலன்களை அடக்குதல் ஆகியவற்றை கற்றுக்கொள்ளும் காலமாக கருதப்படுகிறது. பெண்கள், ஆண்கள், குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

“நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்” என்ற நபியவர்களின் கூற்றின்படி, நோன்பும், பெருநாளும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. 

நோன்பு காலத்தில் கட்டாயம் 5 முறை தொழுகை மேற்கொள்ள வேண்டும். நோன்பு காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும் அஸ்தமனத்திற்குப் பின்னரும் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முந்தைய உணவு ஷேரி என்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் உண்ணப்படும் உணவு இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் இந்த புனித மாதத்தில் கொடை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. நோன்பு காலத்தில் வன்முறை, கோபம், பொறாமை, பேராசை, காமம், புறம்பேசுதல் போன்ற தீய குணங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். சகோதரத்துவத்தைப் பேண வேண்டும் என்கின்றனர். 

30 நாள் நோன்பிற்கு பின் ரமலான் மாத இறுதி நாளில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளன்று காலையில் குளித்துவிட்டு, காலை உணவு அருந்திய பின் அனைவரும் தொழுகைக்கு செல்வார்கள், அங்கு தொழுகை முடித்துக்கொண்டு மத்திய உணவிற்கு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவை அருந்தி, அக்கம் பக்கத்தினருக்கும் அந்த உணவை பகிர்ந்து கொள்வார்கள்.

நேற்று பிறை தெரிந்து இன்று நோன்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பிறை தெரியாததால் இன்று பிறை தெரிந்ததும் நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget