மேலும் அறிய

11th Public Exam: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முழு விவரம் இதோ..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 7.73 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 224 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று மொழி பாடம் தேர்வு நடைபெறுகிறது. 

மார்ச் 16 - ஆங்கிலம்

மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 24 - உயிரியல், தாவரவியல், வரலாறு

மார்ச் 28 - வேதியல், கணக்குப்பதிவியல்

மார்ச் 30 - கணினி அறிவியல்

ஏப்ரல் 5 - கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வை போலவே 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (regiter number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 4 ஆயிரத்து 235 பேர் பறக்கும் படை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் மொபைல் அல்லது மின் சாதன பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் ஆள்மாறாட்டம், அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து தேர்வை எழுதுவது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிள்ஸ் 2 மாணவர்களுக்கு மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத்தாள் எளிதாக இருந்ததாக கூறினர். ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றும், 2 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது வெளியில் தேர்வு எழுத அனுப்பினால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பலரும் தேர்வு எழுதாமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று இருந்த போது அரசு 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் தற்போதும் இந்த நிலை தொடர்வது வருத்தமளிக்கும் விஷயமாக கருதுகின்றனர். 

10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது.  ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஏப்ரல்  6 - மொழித்தாள்

ஏப்ரல் 10 - ஆங்கிலம்

ஏப்ரல் 13-  கணிதம்

ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்

ஏப்ரல் 17- அறிவியல்

ஏப்ரல் 20- சமூக அறிவியல் 

தேர்வு மையங்களில் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, இருக்கை என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை அச்சமின்றி, டென்ஷன் இல்லாமல் அணுக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

Chennai Food Street : உணவு பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சென்னைல ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ வரப்போகுது.. எங்கே எப்போன்னு தெரியுமா? முழு விவரம் இதோ..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget