மேலும் அறிய

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அறுத்து சென்று அட்டூழியம்

படகில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி 4 செல்போன்கள் மற்றும் மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது கத்தியால் வெட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி செல்போன்கள், இடுப்பில் இருந்த வெள்ளி அருணாக்கயிறை அறுத்து சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் மணியன் வேல்முருகன் சத்யராஜ் கோடிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அதிவேக படகுகளில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களை கத்தியால் வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனை தடுத்த கோடிலிங்கம், மணியன் ஆகியோரை ரப்பர் தடியால் சாரமாறியாக தாக்கி, கை கால் முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மீனவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி 4 செல்போன்கள் மற்றும் மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அறுத்து சென்று அட்டூழியம்
 
படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கத்தியால் வெட்டு காயம் பட்ட அக்கரைப்பேட்டையை சேர்ந்த கோடிலிங்கம் வெள்ளபள்ளத்தை சேர்ந்த மணியன் ஆகியோருக்கு தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
 
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி தளவாடப் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவத்தால் நாகை வேதாரண்யம் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Embed widget