மேலும் அறிய

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அறுத்து சென்று அட்டூழியம்

படகில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி 4 செல்போன்கள் மற்றும் மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது கத்தியால் வெட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி செல்போன்கள், இடுப்பில் இருந்த வெள்ளி அருணாக்கயிறை அறுத்து சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் மணியன் வேல்முருகன் சத்யராஜ் கோடிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அதிவேக படகுகளில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களை கத்தியால் வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனை தடுத்த கோடிலிங்கம், மணியன் ஆகியோரை ரப்பர் தடியால் சாரமாறியாக தாக்கி, கை கால் முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மீனவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி 4 செல்போன்கள் மற்றும் மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அறுத்து சென்று அட்டூழியம்
 
படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கத்தியால் வெட்டு காயம் பட்ட அக்கரைப்பேட்டையை சேர்ந்த கோடிலிங்கம் வெள்ளபள்ளத்தை சேர்ந்த மணியன் ஆகியோருக்கு தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
 
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி தளவாடப் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவத்தால் நாகை வேதாரண்யம் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget