மேலும் அறிய

Special Train: தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மேலும் ஒரு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விபரம் உள்ளே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த பண்டிகை வரும் நிலையில், அதற்கு மறுநாள் (நவம்பர் 13) ஆம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் வெளியூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் எளிதாக தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படியான நிலையில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது என கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தயாராகி வருகிறார்கள். இதற்கான பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட 10,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. 

மேலும் ஆம்னி பஸ்களை எடுத்துக் கொண்டால் அதன் கட்டணம் நம்மை பண்டிகையே வேண்டாம் என சொல்ல வைத்து விடும் அளவுக்கு உள்ளது. இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட செலவை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு கிட்டதட்ட முடிந்து விட்டது. இதற்கிடையில் ரயில் பயணம் பற்றி சொல்லவே வேண்டாம். 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால் கடந்த ஜூலை மாதமே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. 

இதனால் தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி வழித்தடத்தில் நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு - நாகர்கோவில் இடையே இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. நவம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
Embed widget