AIADMK Split: கடைசியில் தன்னைத் தானே நீக்கிக் கொள்வாரோ இபிஎஸ்? - வேலுமணி தரப்பு கலாய்ப்பு
இபிஎஸ் தரப்பு மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேலுமணி தரப்பு மனு அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யக்கோரி வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கெனவே மனு அளித்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் வேலுமணி தரப்பினர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர், “ உத்தரவுக்கு இபிஎஸ் கட்டுப்படவில்லை. கொறடாவான எனது உத்தரவை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் ஏற்கவில்லை. கொறடா உரிய விதிகளின் அடிப்படையில் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை முடிவுதான் செல்லும்” என்றார்.
எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், “அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவினால் யாரையும் நீக்க முடியாது. கட்சியில் கருத்து முரண் நிலவினால் யாரையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவும் செல்லாது. எல்லோரையும் போங்க, வாங்க என எடப்பாடி பழனிசாமி நீக்கி கொண்டே இருக்கிறார்” என்றார்.
நத்தம் விஸ்வநாதன் கொடுத்த பேட்டியில், “தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை. அவருக்கு நீக்கி மட்டுமே பழக்கம் உள்ளது. இபிஎஸ்-ஆல் நீக்கப்பட்ட 50 பேர் வேறு கட்சியில் எம்எல்ஏக்களாகிவிட்டார்கள். போற போக்கை பார்த்தால் தன்னை தானே இபிஎஸ் நீக்கி கொள்வார் போல” என்று கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















