மேலும் அறிய

சிவகங்கை: சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு, அபராதம், உரிமம் ரத்து!

மினிப்பேருந்துகள் மற்றும் தடப்பேருந்து வாகனங்களினை இயக்கும் அனுமதிதாரர்கள் தங்களது வாகனங்களின் படிகளில் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல், விதிகளை மீறும் வாகன  ஓட்டுநர்கள் மீது, விதி மீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -மாவட்ட  ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

சிவகங்கையில் அதிகரித்த சாலை விபத்து
 
சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சில சோகமான சம்பவங்கள், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்துகின்றன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்
 
அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தினை இயக்கும் ஓட்டுநர்களின், ஓட்டுநர் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிக தடையுடன் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-ன் படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், மது போதையில் வாகனத்தினை இயக்குதல், சீல் பெல்ட் அணியாமல் வாகனத்தினை இயக்குதல், செல்போன் பயன்படுத்தி கொண்டே வாகனத்தினை இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களின் ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக தடை நடவடிக்கை செய்யப்படுவதுடன், அசல் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும். ஆட்டோ ரிக்சா வாகனதாரர்கள் தங்களது வாகனத்திற்கென அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதலாக நபர்களை ஏற்றக்கூடாது. அதனை தவறும் பட்சத்தில், தனியர்களது வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, அனுமதிச் சீட்டும் இரத்து செய்யப்படும்.  
 
வாகனமும் சிறைபிக்கப்படும்
 
மேலும், மினிப்பேருந்துகள் மற்றும் தடப்பேருந்து வாகனங்களினை இயக்கும் அனுமதிதாரர்கள் தங்களது வாகனங்களின் படிகளில் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதில், குறைபாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில், பேருந்தின் முதன்மை அனுமதிச் சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்க்கொள்வதுடன், வாகனமும் சிறைபிக்கப்படும். அதேபோன்று, பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே பேருந்துகளை இயக்கிட வேண்டும்.   அதிவேகமாக பள்ளிப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களது ஓட்டுநர் உரிமமானது தற்காலிக தடை செய்யப்படுவதுடன், பள்ளிப் பேருந்தின் அனுமதிச் சீட்டும் இரத்து செய்யப்பட்டு, வாகனம் சிறைபிடிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget