மேலும் அறிய

காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..

கொரோனா பாதிப்புக்குள்ளானவரை அலைக்கழித்த காப்பீடு திட்ட அலுவலர்கள் ; ஆம்புலன்ஸில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவரை அலைக்கழித்த காப்பீடு திட்ட அலுவலர்களால், ஆம்புலன்ஸில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
 

காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..
 
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா நோய்தொற்றின் அலை வேகமாகப் பரவிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கைகளின் தேவை என பல்வேறு சிக்கல்களையும் தீர்வு காணவேண்டும் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இப்படி அசாதாரண சூழலில் முன்களப்பணியாளர்கள் உட்பட பலரும் தீவிரமாக பணி செய்துவரும் சூழலில், கொரோனா நோயாளியை அதிகாரிகள் நேரில் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த லாடனேந்தலை  சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதால்  இவரது  மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சை எடுத்துக்கொள்ள மதுரையில் உள்ள பிரபல தனியார்  மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் ராஜபிரபுவிடம் காப்பீட்டு அட்டை இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து, உறவினர் ஒருவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அலுவலரிடம் கேட்டதற்கு " கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை நேரில் அழைத்துவர அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..
இதனைத் தொடர்ந்து அவரை ஆக்ஸிசன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் மூலம்  சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்திற்கு நோயாளியை அழைத்துவந்தனர். இதனை கண்ட அங்கிருந்த மற்ற அலுவலர்கள் அச்சமடைந்ததுடன் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தொற்றால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தியதுடன் அங்கிருந்த காப்பீட்டு திட்ட அதிகாரிகளிடம் இதுபோல் அழைத்துவர வலியுறுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பினார். நோயாளியை 50 கிலோ மீட்டர் தூரம் மருத்துவ காப்பீட்டு அட்டைக்காக அழைத்துவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

காப்பீட்டு அட்டையை கேட்டு அலைக்கழித்த அலுவலர்கள் : ஆம்புலன்ஸில் வந்திறங்கிய கொரோனா நோயாளி..
இது குறித்து சமூக ஆர்வலர்கள், ” உயிருக்கு போராடும் நோயாளிக்கு அரசு அதிகாரிகள் விரைவாக உதவி செய்யவேண்டும். இந்த சமயத்தில் சாமர்த்தியமாக பணி செய்யாமல், பொதுமக்களுக்கு சவாலான வேலை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? கொரோனா நோயாளியை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரியை விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்றனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்Tamilisai Pressmeet : ”சாதியை வைத்து அரசியலா? இனி சும்மா இருக்க மாட்டோம்” ஆவேசமான தமிழிசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
K.E.Gnanavel Raja:
K.E.Gnanavel Raja: "வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி" தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
Inheritance Tax: பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
Guru Peyarchi 2024 Palangal: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Guru Peyarchi 2024: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Embed widget