மேலும் அறிய

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு; தணிக்கை அறிக்கையில் காத்திருந்த அதிர்ச்சி

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி  சட்டபேரவையில் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடைந்த நிதி ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டைவிட ரூ.891 கோடி குறைந்திருந்தது. 2019- 2020ல் ரூ.7 ஆயிரத்து 163 கோடியாக இருந்த மொத்த செலவினம் 2020-2021ல் ரூ.7 ஆயிரத்து 505 கோடியாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ.424 கோடி அதிகம் ஆகும். மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடான ரூ.9 ஆயிரத்து 256 கோடியில் ரூ.8 ஆயிரத்து 361 கோடி செலவிடப்பட்டு ரூ.894 கோடி சேமிப்பு ஏற்பட்டது. 10 தலைப்புகளில் எந்த ஒரு செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை. 788 நேர்வுகளில் ரூ.462 கோடிக்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையிலிருந்தன.

இவற்றில் ரூ.39.88 கோடிக்கான 226 பயன்பாட்டு சான்றிதழ்கள் 9 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 70 அமைப்புகளில் 2020-2021 வரை பெறப்பட வேண்டிய ஆண்டு கணக்குகள் தணிக்கையால் பெறப்படவில்லை. 2021 மார்ச் வரையில் பல்வேறு அரசுத்துறைகளில் 321 நேர்வுகளில் ரூ.28 கோடியே 5 லட்சம் அரசுப்பணம் முறைகேடு, இழப்பு, களவு மற்றும் பணக்கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேச அரசு தெரிவித்தது. 13 அரசு நிறுவனங்களில் மொத்த முதலீடு ரூ.738 கோடியாகும். 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.35.07 கோடி லாபத்தையும், 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.62.43 கோடி நஷ்டத்தையும் அடைந்து ரூ.27.36 கோடி நஷ்டத்தை சந்தித்தன. 12 அரசு நிறுவனங்களின் கணக்குகளும் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருந்தன. 2 நிறுவனங்கள் நிலுவையிலிருந்த 2 கணக்குகளை 2020-21 காலகட்டத்தில் தணிக்கைக்கு சமர்ப்பித்தன. என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன்

நிறைவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2017-20 காலகட்டத்தில் மின் அனுப்புகை மற்றும் பகிர்மான இழப்பின் மதிப்பு ரூ.69.51 கோடியாக கணக்கிடப்பட்டது. குறைபாடுள்ள அளவிகளை மாற்றவதில் தாமதங்கள் ஏற்பட்டது. பழுதடைந்த அளவிகள் 15 வேலை நாட்களுக்குள் மாற்றித்தரப்பட வேண்டியபோதிலும் 25 ஆண்டுகளாக குறைபாடுள்ள அளவிகள் மாற்றப்படவில்லை. ரூ.709 கோடி வருவாய் வசூலிக்கப்படவில்லை. சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் எந்தவொரு பணியிலும் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் செய்த பணிக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.

மாதிரி சிறை நடைமுறை விதிகளுக்கு எதிராக தகுதிவாய்ந்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஆய்வு மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைக்கப்படவில்லை. குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்பாகவே பயனாளிகளை தேர்வு செய்யாதது மற்றும் அதன் தொடர்ச்சியாக குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாதது ஆகியவை ரூ.1.54 கோடி பயனற்ற முதலீட்டிற்கு வழிவகுத்தது. மீன்களை பதப்படுத்த 2015-ல் ரூ.3.09 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பனிக்கட்டி ஆலை மற்றும் குளிர்பதன சேமிப்பு நிலையம் ஆகியவை 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வணிக ரீதியிலான செயல்பாட்டை தொடங்கவில்லை என தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget