மேலும் அறிய

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி! புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு வந்த சிக்கல் !

தமிழகத்தில் ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என புதிய கட்டுபாடுகள் வந்துள்ள நிலையில் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என புதிய கட்டுபாடுகள் வந்துள்ள நிலையில் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டு கேட்டுக் கொண்டு பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், ரேஷன் கார்டில் உறுப்பினர் நீக்கம் உள்ளிட்ட மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற உணவு வழங்கல் துறையின் புதிய உத்தரவுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு 

மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வுக்காக 2023 மே மாதம் வரை மாதந்தோறும் சராசரியாக 40,000 முதல் 50,000 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 25,000 முதல் 30,000 வரை புதிய ரேஷன் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2023 செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக அனைத்து கார்டுதாரர்களுடைய வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நிபந்தனைகள் பூர்த்தி செய்தவர்களே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் சிக்கல் 

இதன் பின்னணியில் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரித்தன. இதனால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள கார்டுகளில் இருந்து உறுப்பினர்களை நீக்குவதிலும் துறையினர் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், மாதந் தோறும் சராசரியாக 25,000 பேர் விண்ணப்பித்தாலும், 5,000 பேருக்கு மட்டுமே புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே ரேஷன் கார்டு திருத்தம் செய்ய முடியும் 

முன்னர், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் போன்ற சேவைகளுக்கு பொதுவினியோக திட்ட இணையதளம் வழியாக எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இருந்தது. ஆனால் தற்போது, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. இதனால் இது புதிய ரேஷன் கார்டுகளுக்கான கட்டுப்பாடா என்ற சந்தேகம் கார்டுதாரர்களிடம் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் தெரிவித்துள்ளார்:

"ரேஷன் கார்டு என்பது மக்கள் அத்தியாவசிய ஆவணம். வேலை, கல்வி போன்ற காரணங்களால் பலர் அடிக்கடி முகவரி மாற்றம் செய்கின்றனர். திருமணம் ஆனவர்கள் தனி குடும்பமாக செல்லும்போது பெயர் நீக்கம் அவசியம். இத்தகைய அத்தியாவசிய சேவைக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வது சிரமம்,” என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி கூறுகையில், “சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது,” என தெரிவித்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என புதிய கட்டுபாடுகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget