மேலும் அறிய

தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்தல் நீதிமன்றங்களை இந்தியத் தேர்தல் ஆணையமே அமைக்கலாம். இதில் மாநில அரசுகளுக்கோ, நடுவண் அரசுக்கோ இடமில்லை என்று விதி உருவாக்கப்பட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கத் தேர்தல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும், முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் வாக்குப் பதிவு நாளில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இணையவழி ஒளிபரப்பு (webcasting) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission) முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த இணையவழி ஒளிபரப்பு முறை தற்போது 50% விழுக்காடுதான் நடைமுறையில் உள்ளது. அதிலும், பதற்றமான சாவடிகள், அசம்பாவிதம் நேரக் கூடும் என எதிர்பார்க்கும் சாவடிகளில் மட்டுமே அமலில் இருக்கிறது. இனி, அனைத்து சாவடிகளிலும் இது செயல்படுத்தப்பட்டால், கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பெரிதும் துணை புரியும்.

இதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையவசதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு நிகழ்வுகள் உடனுக்குடன் இணையவழியாக காட்சியோடு ஒலியும் இடம்பெறும் இதை முழுமையாகப் பதிவு செய்யும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க இந்த நடைமுறை பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், தேர்தல் சமயங்களில் பணப் பட்டுவாடா. அனுமதிக்கப்பட்டதற்கு மேலாக பணம் எடுத்துச் செல்லுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பொருள் ஆகியவற்றை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சாவடியில் போலி வாக்காளர்கள், ஒருவரே போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு பலமுறை வாக்களித்தல் எனப் பல முறைகேடுகளைத் தேர்தல் அலுவலர்கள் கண்டுபிடிக்கின்றனர். சில சமயம் வரம்பு மீறுவோர் ஓரிரு நாள்கள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தொடர் நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுவதில்லை. காரணம், தேர்தல் முடிந்த பின், முடிவுகள், ஆட்சி அமைப்பது என அரசியல் காட்சிகளே அரங்கேறுகின்றன. இந்த முறைகேடுகள் மறக்கப்படுகின்றன. இதனால், தேர்தல் ஆணையத்தின் மீது புகார் எழுகிறது. 

இவற்றைத் தவிர்க்கவும், தேர்தலைச் செம்மையாக நடத்தவும், தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்கலாம். தேர்தல் நீதிமன்றங்கள் (Poll Courts) என்ற பெயரிலான இந்த நடுவர் மன்றங்களில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மாநில உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் ஆகியோரை அமைத்து விசாரித்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அந்தந்த மாநில தேர்தல் அலுவலகங்களில் இதற்கென தனி வழக்குரைஞர்களையும் நியமிக்கலாம்.

இந்த தேர்தல் நீதிமன்றங்களை இந்தியத் தேர்தல் ஆணையமே அமைக்கலாம். இதில் மாநில அரசுகளுக்கோ, நடுவண் அரசுக்கோ இடமில்லை என்று விதி உருவாக்கப்பட வேண்டும். மேலும், சிசிடிவி கேமரா, இணையவழிக் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில், தேர்தல் விதி கடந்த ஆண்டு டிசம்பரில் மாற்றப்பட்டது. அதைப் போன்ற கட்டுப்பாடு இந்த நீதிமன்ற விசாரணைகளிலும் கடைப்பிடிப்பதால், வழக்கு விரைவில் முடிய வழியேற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget