மேலும் அறிய

RSS Rally Postponed : ’இதற்காக யோசிக்கிறோம்..’ : தமிழ்நாட்டில் பேரணியை ஒத்திவைத்ததா ஆர்.எஸ்.எஸ்?

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

”தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 44 இடங்களில் மட்டும் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என யோசித்துள்ளோம்” என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

RSS Campaign:  தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி

விஜயதசமி, சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது.  ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் அனுமதி நடத்த முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

நவம்பவர் 6-ஆம் தேதி அனுமதி

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவம்பர் 4-ஆம் தேதி அதாவது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார். 

மேலும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற எந்த இடங்களில் வழங்கவில்லை என ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

நேற்று விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும் அசம்பாவிதங்கள் நடந்தால் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget