![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குபின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்ட நிலையில், அந்த சிறுவன் இன்று உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு Rs 10 lakh relief has been announced for the family of a boy who died after being shot in the head in Pudukkottai தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/a4c7bbe2981ebc108c170314bbc8a4c6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்தில் இருந்து சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குபின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)