மேலும் அறிய

Tasmac: மதுவால் சரசரவென அதிகரிக்கும் சாலை விபத்துகள் : மூச்சுத்திணறும் மருத்துவமனைகள்..!

டாஸ்மாக் கடைகள் திறப்பால் சென்னையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கயுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மதுபோதையில் விபத்துக்குள்ளாகி அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முழு முடக்கம் அமலாகி இருந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய குறைய அதற்கேற்றார்போல் மாவட்டவாரியாக தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னயில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன.

Tasmac: மதுவால் சரசரவென அதிகரிக்கும் சாலை விபத்துகள் : மூச்சுத்திணறும் மருத்துவமனைகள்..!

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிசை வார்டில் தினமும் 30 வழக்குகள் பதிவாகி வந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று 200-க்கும் அதிகமான அறுவை சிகிச்சை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 70% விபத்துகள் மது அருந்தி இருந்ததால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac: மதுவால் சரசரவென அதிகரிக்கும் சாலை விபத்துகள் : மூச்சுத்திணறும் மருத்துவமனைகள்..!

பெரும்பாலும் சாலை விபத்துகள் மூலம் நடக்கும் உயிரிழப்புகளுக்கு வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவிக்கும் நிலையில், ஊரடங்கும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கும் அமலில் இருந்த போது பதிவான விபத்துகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என கூறும் போக்குவரத்து காவல் துறையினர். டாஸ்மாக் கடைகள் திறந்ததால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை மாநகரம் முழுவதும் வாகன சோதனையை பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tasmac: மதுவால் சரசரவென அதிகரிக்கும் சாலை விபத்துகள் : மூச்சுத்திணறும் மருத்துவமனைகள்..!

தற்காலிகமாக மூடப்பட்டிந்த சோதனை சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த வாரம் திங்கள் கிழமையன்று நடத்திய சோதனையில் 50-க்கும் அதிமான நபர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிட் 19 தொற்று அபாயம்  உள்ளதால் வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளார்களா என்பதை சோதிக்க குழலை வைத்து ஊதும் நடைமுறையை பின்பற்றவேண்டாம் என பெருநகர காவல் போக்குவரத்து காவலர்களுக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளதை கண்டறிய பயன்படுத்தப்படும் நவீன கருவியை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் அதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அதனை பின்பற்றும் நடவடிக்கைகளை பெருநகர சென்னை போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Embed widget