மேலும் அறிய

Raj Bhavan Tea Party: குடியரசு தினம்: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து - பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்! மோதலுக்கு முற்றுப்புள்ளியா?

சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழ்நாடு சட்ட பேரவையில், அரசு தயாரித்த அறிக்கையில் சில பகுதிகளை படிக்காமல் ஆளுநர் தவிர்த்து படித்தார். அப்போது, ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் வெளியேற்றம் செய்தார். 

சட்டப்பேரவையில் நடைபெற்ற சர்ச்சை சம்பவத்திற்குப் பிறகு 17 நாட்களுக்கு பின் ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

உரசல்:

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசல்கள் தொடங்கிவிட்டன. சமீபத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று இந்த மாநிலத்தை அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று பேசியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், ஆளுநர் ஆர் என் ரவியின் உரைக்கு எதிராக அவர் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் அவையை விட்டு ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். மேலும் அவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவருக்கு சென்ற பிரச்னை:

இதையடுத்து திமுக எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநர் குறித்து முறையிட்டனர். இதையடுத்து இது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி சென்றிருந்தார் ஆர்.என்.ரவி. ஆளுநர் மாளிகை தரப்பில் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து,  விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் ”வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது  காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.  அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.  எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு  என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்” என குறிப்பிடப்பட்டது.

அதேபோல 74ஆவது குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதேபோல தமிழ்நாட்டின் சின்னமும் திருவள்ளுவர் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் ஆளுநருக்கு டெல்லியில் இருந்து ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

நேருக்கு நேர் சந்திப்பு:

இதையடுத்து சட்டப்பேரவை சர்ச்சை சம்பவத்திற்கு பிறகு 17 நாட்கள் கழித்து ஆளுநரும் முதலமைச்சரும் குடியரசு தின விழாவில் நேருக்கு நேர்  சந்தித்து கொண்டனர். அப்போது  நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சிரித்த முகத்துடன் கை குலுக்கி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பதில் வணக்கம் செலுத்தி, வரவேற்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ரவி.

 அதன்பிறகு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய ஆளுநர், மேடைக்குச் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், மேடையில் இருந்தபடி ஆளுநரும், முதலமைச்சரும் சிரித்துப் பேசி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

ஆளுநர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பு

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டார். தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் காலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget