மேலும் அறிய

Francis Kiruba: காலமானார் பிரபல எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா..!

Poet Francis Kiruba Passed Away: கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃப்ரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஃப்ரான்சிஸ் கிருபா(Francis Kiruba). இலக்கிய வட்டாரத்தில் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஃப்ரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார். கவிஞரான ஃப்ரான்சிஸ் கிருபா பல்வேறு கவிதை தொகுப்புகளுடன் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படமான காமராஜ் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தையும் பிரான்சிஸ் கிருபாதான் எழுதியுள்ளார்.


Francis Kiruba: காலமானார் பிரபல எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா..!

இவர் எழுதிய கன்னி எனும் நாவலுக்கு 2007-ஆம் ஆண்டு தமிழின் முன்னணி வார இதழ் ஒன்றில் சிறந்த புதினம் என்ற விருது கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு இவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தரராமசாமி விருது கிடைத்தது.

கவிதைக்கான விருது என்ற நூலுக்காக சுந்தரராமசாமி விருத பெற்ற இவர், சம்மனசுக்காடு என்ற நூலுக்காக சுஜாதா விருது, மீரா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இவர் இதுவரை மல்லிகை கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலின்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.


Francis Kiruba: காலமானார் பிரபல எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா..!

2019-ஆம் ஆண்டில் ஒரு முறை, ஃப்ரான்சிஸ் கிருபா ஒருமுறை கோயம்பேட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞர் உயிரிழந்ததாலும், பிரான்சிஸ் கிருபா நீண்ட முடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருந்ததாலும் போலீசார் அவர்தான் கொலையாளி என்று சந்தேகித்து அவரை கைது செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உயிரிழந்த வடமாநில இளைஞர் வலிப்பு ஏற்பட்டும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாலே உயிரிழந்ததாகவுமே கண்டறியப்பட்டது. அதன்பின்னரே பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ரான்சிஸ் கிருபா உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. ஃப்ரான்சிஸ் கிருபா தனது இறுதிநாட்களில் வறுமையால் மிகவும் வாடியதாகவும், அதனால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியதாகவும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் படிக்க : 'சின்னத்திரைக்கு வரும் சின்னத்தாய் மகன்!’ - இளையராஜாவின் மியூசிகல் ரியாலிட்டி ஷோ விரைவில்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
Embed widget