Ranipet Fire Accident: ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து; 2 பேர் பரிதாப பலி- வெளியான அதிர்ச்சி வீடியோ!
Ranipet Fire Accident News: தீ விபத்து குறித்து அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளே போராடிக் கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐஸ்க்ரீம் பார்லரில் தீ விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே தேவி நகர் பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவில் தனியார் ஐஸ்கிரீம் பார்லர் கடை உள்ளது. அங்கு ஐஸ்க்ரீம் தயாரிக்க பால் காய்ச்சும்போது, பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஐஸ்க்ரீம் கடையின் உரிமையாளர் பவன்லால், பணியாளர் சுந்தரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளே போராடிக் கொண்டிருந்த இருவரை மீட்டனர். கடும் தீக்காயங்களோடு ஆம்புலன்ஸில் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிதாபமாக பலி
#WATCH | Tamil Nadu: A fire broke out at an ice cream parlour operating on Bharathidasan Street in Arcot, Ranipet district. Fire and Rescue Services personnel, who rushed to the spot upon receiving information, battled the blaze for a prolonged period before bringing it under… pic.twitter.com/iu60CAjEpY
— ANI (@ANI) April 13, 2026
எனினும் அதீதமாக தீக் காயங்கள் காரணமாக, உரிமையாளர் பவன்லால், பணியாளர் சுந்தரி ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். இதுதொடர்பான ஆற்காடு காவல்துறை அதிகாரிகள், முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















