மழை வருமா! ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பிரதமர் மோடி
PM Modi- Rameshwaram Weather: ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கவுள்ள நிலையில், வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

பிரதமர் மோடி, பாம்பன் ரயில் பாலத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைக்க ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் வருகை தருகிறார். மேலும், அதே நேரத்தில் ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரை செல்லக்கூடிய, புதிய பயணிகள் ரயிலையும் தொடக்கி வைக்கிறார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை( ஏப்ரல் 6 ) வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலை பார்ப்போம்.
ஏப்ரல் 6- வானிலை:
தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக அடுத்த சில தினங்களுக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது ,“ ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 6 ) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே சமயத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07-04-2025 முதல் 11-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
சென்னை வானிலை:
சென்னையை பொறுத்தவரை, ஞாயிற்றுக் கிழமை (06-04-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















