![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RAIN ALERT :தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் டெரிவித்துள்ளது
![RAIN ALERT :தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் rain alert: rainfall in TN for next 5 days RAIN ALERT :தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/1d5ee0603cf0d99fedec4f18214631901666441507106589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக்கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்து தாழ்வு மண்டலமாக உருமாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
24.10.2022 மற்றும் 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
உசிலம்பட்டி (மதுரை), சாத்தூர் (விருதுநகர்), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 6, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), விரகனூர் அணை (மதுரை) தலா 4, வேப்பூர் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வைப்பார் (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), மதுரை விமான நிலையம் (மதுரை), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), கீழச்செருவை (கடலூர்), மேமாத்தூர் (கடலூர்) தலா 3 என பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)