மேலும் அறிய

'உருவாகியது புதுவை பஜார் செயலி’ வணிகர்களின் புதிய முயற்சி..!

புதுச்சேரியில் உள்ளூர் வணிகர்களுக்காக ‘புதுவை பஜார்’ செயலி அறிமுகம் பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதுச்சேரி வணிகர்களின் புதிய முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளூர் வணிகர்களுக்காக ‘புதுவை பஜார்’ செயலி அறிமுகம் பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதுச்சேரி வணிகர்களின் புதிய முயற்சி.

புதுவை பஜார்

இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வருகிறது. இதன் தாக்கம், குறிப்பாக உள்ளூர் மற்றும் சிறு வணிகர்களை பெரிதும் பாதித்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் தேவையின்றி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் உள்ளூர் வணிகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பலரும் வீட்டில் உட்கார்ந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அந்த பொருள் வீடு தேடி வரத் துவங்கிவிட்டன.   ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில், குறிப்பாக புதுச்சேரியில் உள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் மெல்ல மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது.   தங்களுடைய தொழிலை மீட்டெடுப்பதற்காக புதுச்சேரி மாநில வணிகர்கள் தற்போது ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களும் ஆன்லைனுக்கு மாறிவிட்டனர்.

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் சிறு, பெரு வியாபாரிகள் வெகுவாகப் பதிப்பு

புதுவை பஜார் என்ற செயலியை அவர்கள் உருவாக்கி அதில் புதுச்சேரியில் பெரும்பான்மையான வணிகர்களை இணைத்துள்ளனர்.   இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அவர்களுக்குத் தேவையான எந்த பொருளையும் உடனடியாக ஆர்டர் செய்து வாங்கி விட முடியும். இந்த புதுவை பஜார் வலைதளச் செயலிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என, புதுச்சேரி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதனிடையே புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கான புதுவை பஜார் செயலியை வணிக கூட்டமைப்பு செயலாளர் முருகபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சித்திக் ரகுமான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்து, கூறியதாவது:

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் சிறு, பெரு வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு நம்ம ஊர், நம்ம கடை என்ற கொள்கையுடன் புதுவை பஜார் என்ற வலைதள செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள சுமார் 5 லட்சம் வணிகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வியாபாரப் பணிகளை செய்யலாம். அனைத்துவித வியாபார செயல்பாடுகளுக்கான ஒன்-ஸ்டாப் என, சொல்லக்கூடிய வகையில் இந்த புதுவை பஜார் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் மொபைல் வழியாக டவுண்லோடு செய்து பொருட்களை ஆர்டர் செய்யலாம். முன்பதிவு மற்றும் அவசர சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

ஆன்லைன் சேவை இல்லாததை பெரிய குறைவாக உணர்ந்தோம்

இந்திய வணிர்களுக்கென்று ஒரு ஆன்லைன் சேவை இல்லாததை பெரிய குறைவாக உணர்ந்தோம். அதன் காரணமாகவே இதனை துவக்கியுள்ளோம். பல வெளிநாட்டு நிறுவனங்கள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கமிஷன் வசூலித்து நமது வணிகத்தை அதிக அளவில் பாதிக்க செய்கின்றன. இதனால் மக்களுக்கு 100 ரூபாயில் கிடைக்க கூடிய பொருள் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு மாற்று தான் நம்முடைய புதுவை பஜார் செயலி. பெரிய நிறுவனங்களின் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது. நீங்கள் விரும்பிய கடையை தேர்வு செய்து நியாயமான விலைக்கே பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆர்டர் செய்தால் உணவக விலைக்கே வீட்டிற்கு உணவு வந்து சேரும். சுற்றுலாப் பயணிகள் இந்த செயலியைப் டவுண்லோடு செய்து கொண்டால், வணிகம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு பெறலாம். உள்ளுர் வணிகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget