மேலும் அறிய

புதுச்சேரி : இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக 30-ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.. வாரிய தலைவர் பதவி யாருக்கு ?

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வருகிற 30-ஆம் தேதி புதுச்சேரி சட்டப் பேரவை கூடுகிறது. வாரிய தலைவர் பதவி இடங்களை நியமிக்கவும் திட்டம்

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவை இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையே இருந்து வருகிறது. அதாவது, மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகாவது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது மரபாகும். அந்த வகையில் கடந்த (பிப்வரி) மாதம் 23-ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடியது. அன்றைய தினம் 20 நிமிடமே சட்டசபை கூட்டம் நடந்து முடிந்தது.


புதுச்சேரி : இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக 30-ஆம் தேதி  சட்டப்பேரவை கூடுகிறது.. வாரிய தலைவர் பதவி யாருக்கு ?

இதையொட்டி இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் தற்போதும் பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை சட்டசபை வருகிற 30-ஆம் தேதி கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், இ்ம்மாத இறுதியில் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படாத நிலையில் சட்டப் பேரவையில் கவர்னர் உரை இடம் பெறாது என்று தெரிகிறது.

இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டப்பட உள்ளதையொட்டி கூட்ட அரங்கு சுத்தம் செய்யப்படுவதுடன் அங்குள்ள மேஜை, நாற்காலிகள் சுத்தம்செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget