மேலும் அறிய

திருவாரூரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பொதுமக்கள் புகார்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தடுப்பூசி மையத்திலிருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படாமல் இருப்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பொதுமக்கள் புகார்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ச்சியாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தோற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்.  இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தடுப்பூசி மையத்திலிருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படாமல் இருப்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு மாவட்டத்தில் இருக்கக் கூடிய பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.


திருவாரூரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பொதுமக்கள் புகார்

உதாரணமாக கோவிஷில்டு, கோவாக்சின்  ஆகிய தடுப்பூசிகள் முதலில் 28 நாட்கள் கழித்து இரண்டாவது சுற்று போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர்  கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மட்டும்  6 முதல் 8 வாரத்திற்குள் போட்டுக்கொள்ளலாம் என கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனைக் காரணம் காட்டி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தநிலையில். தற்போது தடுப்பூசியே இல்லை எனக்கூறி  திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதி சீட்டு வாங்கும் இடம் மற்றும் ஊசி போடும் இடங்களில் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 38000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 6,060 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் முதல் ஊசியை  4451 நபர்களும்,  இரண்டாவது ஊசியை 1615 நபர்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு மாவட்டம் முழுவதும் 2500 முதல் 3000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 200 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. ஆனால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

திருவாரூரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பொதுமக்கள் புகார்

திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் வந்து செல்கிறார்கள். அதுபோல் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கும் இந்த மருத்துவமனைக்கு வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கி கூடுதல் செவிலியர்களை நியமித்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Embed widget