மேலும் அறிய

Perungulathur Flyover: இனி போக்குவரத்து நெரிசலே இல்லாம போலாம்.. பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாடிற்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது.

பெருங்களத்தூர் மேம்பாலத்தை இன்று சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார்.

சென்னைக்கு பெரும்பாலான வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாக தான் வரும். அதுவும் பண்டிகை காலம் அல்லது விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது. கோயம்பேட்டில் இருந்து புறப்படும் வாகனங்கள் இப்பகுதியை விஷேச நாட்களில் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகும். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து மக்கள் பலரும் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே பயணத்தை திட்டமிடுவார்கள்.

அதுமட்டுமின்று தினசரி அலுவலக நேரங்களில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு ரூ. 234 கோடி மதிபில்  மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசன் நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றது.

இந்த நிலையில் பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் செல்லக்கூடிய மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. ஸ்ரீனிவாசன் நகர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், ஆர்எம்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் மற்றும் வண்டலூருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வந்தனர். மேம்பாலம் திறக்கப்படாததால் மக்கள் சுமார் 4 கிமீ தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த கோரிக்கையை முன்னிட்டு இன்று சென்னையில் நுழைவாயிலான பெருங்களத்தூர், ரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். இதனால் அப்பகுதியில் இனி போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Embed widget