மேலும் அறிய

SC on Perarivalan Release: பேரறிவாளன் விடுதலை: காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளனை விடுதலை செய்யுன் தமிழ்நாடு அரசின் தீர்மனத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்யுன் தமிழ்நாடு அரசின் தீர்மனத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார்.


SC on Perarivalan Release: பேரறிவாளன் விடுதலை: காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டி ஜெனரல் இந்த வழக்கை ஒருவார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட நிதிபதிகள் “2018 ஆம் ஆண்டே பேரறிவாளனை விடுவிக்கலாமா வேண்டாமா என்பதை ஆளுநரே முடிவெடிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்திருக்கிறோம். ஆனால் அவர் ஏன் முடிவை எடுக்கவில்லை. இதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தனர். 

தமிழக அரசு தரப்பில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆனால் ஆளுநர் உரிய முடிவு எடுக்கவில்லை. ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தார்” என கருத்து தெரிவித்தது.


SC on Perarivalan Release: பேரறிவாளன் விடுதலை: காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறார். எனவே அவரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். 

இதைக்கேட்ட உச்சநீதிமன்றம் ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை என்பதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தவிட்டு வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது. மீண்டும் வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
Embed widget