மேலும் அறிய

உக்ரைனில் சிக்கிய கடலூர் மாணவரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்

’’அங்கு உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்று ஏறினாலும், தமிழக மாணவர்களை உக்ரைன் மாணவர்கள் கீழே தள்ளி விடுகிறார்களாம்.  இதனால் அவனால் வர முடியவில்லை’’

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், கடந்த சில நாட்களாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது, உலகிலுள்ள பல்வேறு நாட்டினரும் தங்களது மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர் . அந்த வகையில் இந்தியாவிலும் உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களையும், பொதுமக்களையும் படிப்படியாக மீட்டு வருகின்றனர். இதில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். சிலர் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் அங்கு தவித்த நிலையில், 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் அங்கு தவித்து வருகின்றனர்.

உக்ரைனில் சிக்கிய கடலூர் மாணவரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்
அதில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த உதயகுமார் என்ற மருத்துவ மாணவரும் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அவரது தந்தை இளம்வழுதி மற்றும் அவரது தாயார் உறவினருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களை நேரில் சந்தித்து மகனை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார். இது பற்றி அவர் கண்ணீர் மல்க கூறியதாவது, எனது மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படிப்பதற்காக கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் சென்றான். இந்த நிலையில் அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அவன் வசிக்கும் இடத்திலேயே குண்டுகள் வெடித்து வருவதால் மிகவும் பதற்றத்தில் இருக்கிறான். அவனோடு சேர்ந்து தமிழக மாணவர்கள் 38 பேர் இருக்கிறார்கள்.
 

உக்ரைனில் சிக்கிய கடலூர் மாணவரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்
 
அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் கடந்த 5 நாட்களாக உணவு கிடைக்காமல் தவித்து வருகிறேன். அங்கு உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்று ஏறினாலும், தமிழக மாணவர்களை உக்ரைன் மாணவர்கள் கீழே தள்ளி விடுகிறார்களாம்.  இதனால் அவனால் வர முடியவில்லை. இது வரை அவனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் தான் படிக்கவில்லை பிள்ளையாவது படிக்கட்டும் என்று சொந்த ஊரைவிட்டு வெளியே வந்து வாடகை வீட்டிலிருந்து ஒன்பது மாதமாக பத்து வட்டி ஐந்து வட்டிக்கு கடனை வாங்கி பிள்ளையை படிக்காத அனுப்பினோம் ஆனால் தற்போது அவன் அங்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறான். ஆகவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அவனை பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார். தனது மகனை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க கூறியது அனைவரது மனதையும் உலுக்கியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget