மேலும் அறிய

Bodhidharma: வடகிழக்கு மாணவர்களுக்கு போதிதர்மர் கதையைச் சொன்ன ஆளுநர் ஆர்.என். ரவி..!

"நமது ரிஷிகள், முனிவர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட கலாச்சார மற்றும் நாகரீக பரிணாம வளர்ச்சிதான் பாரதம்"

"யுவ சங்கமம் - ஒரே பாரதம் வளமான பாரதம்" என்ற திட்டத்தின்படி, வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களின் இளைஞர்கள், நாட்டின் பிற மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள என்ஐடி மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

திரிபுரா மாணவர்களுடன் கலந்துரையாடல்:

சென்னை ஆளுநர் மாளிக்கைக்கு இன்று வந்த மாணவ, மாணவிகளிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். 2047ஆம் ஆண்டுக்குள், இந்தியாவை உலகின் தலைமை நிலைக்கு கொண்டு வருவதற்கு 'ஒரே பாரதம் உன்னத பாரதத்தை' மீண்டும் நிறுவுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்து பேசினார்.

பாரதம் குறித்து விவரித்து பேசிய அவர், "நமது ரிஷிகள், முனிவர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட கலாச்சார மற்றும் நாகரீக பரிணாம வளர்ச்சியாக பாரதம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதத்தின் ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கும் போது, ​​மகாபலிபுரத்தின் பல்லவ மன்னன், அறிவைத் தேடி நலந்தாவுக்குச் சென்று, போதிதர்மனாக மாறி, புத்தமதத்தை சீனாவுக்குக் கொண்டு சென்றதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

யார் இந்த போதிதர்மன்?

போதிதர்மன் அங்கு, ஷாலின் மடங்களை நிறுவினார். குங் ஃபூவை சீனாவிற்கு அறிமுகப்படுத்தினார். சிட்டகாங்கைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். அது அப்போது பௌத்த ஆய்வு மையமாக இருந்தது. ராமேஸ்வரம் வந்து காஞ்சிபுரம் சென்று காசி சென்றவர் அசாம் மகரிஷி சங்கர் தேவ். பல சத்திரங்களை நிறுவினார். 

சமுதாயம் ஒன்றாக இருந்ததால், மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் இந்த சிறந்த நாட்டை கடந்து சென்றனர். பாரதத்தின் பரிணாம வளர்ச்சியில் மகத்தான பங்களிப்பை வழங்கிய மாபெரும் ஞானிகளால் வரலாறு நிறைந்துள்ளது. இந்தியா காலனித்துவப்படுத்தப்படுவதற்கு முன்பு இரும்பு, பருத்தி மற்றும் தோல் உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. இதுவே இந்தியாவை வளமையாக்கிது.

நமது பண்டிகைகள் (சங்கராந்தி, பொங்கல், பிஹு மற்றும் லோஹ்ரி போன்றவை), நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் அனைத்தும் இந்த ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, கம்ரூப்பாக இருந்தாலும் சரி, பூமி அன்னைக்கு மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள். எங்கள் கிராமங்களில் புனித தோப்புகள் உள்ளன.

சனாதனம் குறித்து புதிய விளக்கம்:

உலகளாவிய ஒருமைப்பாட்டின் நமது சனாதனம் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கியது. நமது வெளிப்படையான வேறுபாடுகளுடன், நாம் ஒற்றுமையால் இணைக்கப்பட்டுள்ளோம். ஆனால், அத்தகைய கண்ணோட்டம் மேற்கில் இல்லை.

மேற்கில், ராஜ்யங்கள் வலுவான அரசர்களால் உருவாக்கப்பட்டன. அவர்கள் பிரதேசங்களை கைப்பற்றி இணைத்து பேரரசுகளை ஒருங்கிணைத்தனர். 1757 ஆம் ஆண்டு வங்காளத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், இந்த நாட்டை துண்டாடத் தொடங்கினர். பாரதத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வடகிழக்கைத் துண்டித்தனர்.

அவர்களின் தவறான கருத்தாக்கத்தால், அவர்கள் மக்களை தனிமைப்படுத்தினர். இது நம் மக்களை அந்நியர்களாக ஆக்கியது. ரெவ். கிளார்க் போன்ற மிஷனரிகள் காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக ஒரு முழுமையான கலாச்சார மற்றும் நாகரீகத் தொடர்பை ஏற்படுத்தவில்லை. வடக்கு கிழக்கை மேலும் துண்டாடினார்கள்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget