மேலும் அறிய

நிறுத்தப்பட்டது ஆக்சிஜன் உற்பத்தி: நாளை மூடப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை?

கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடியும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு கூறியிருந்து. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர அனுமதி கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடியும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுத்தியுள்ளது. இதுவரை 2,132 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆலையில் 134 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பில் இருப்பதாகவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி ஆலையின் அடுத்தக்கட்ட செயல்பாடு அமையும் என்றும் கூறியுள்ளது.

2021 ஏப்ரல் மாத இறுதியில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்தது. ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலையை மேற்பார்வையிடும் என்று நீதிமன்றம் அறிவித்தது.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நிறுத்தப்பட்டது ஆக்சிஜன் உற்பத்தி: நாளை மூடப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை?

முன்னதாக, தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை உள்ளது, வேதாந்தாவின் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்கு, பல்வேறு சமூக அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவத்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமுகச் செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன் இதுகுறித்து கூறுகையில், "ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது. ஏப்ரல் 23 அன்று, தமிழகத்தில் தினம்தோறும் 15,000 கேஸ் இருந்த நிலையில், அரசு உச்ச நீதி மன்றத்தில் உடனடியாக ஆக்சிஜன் தேவை இல்லை என நிலை எடுத்து. ஏப்ரல் மாதத்தில், வேதாந்தா செயல்பட அனுமதிக்கப்பட்டபோது, 2வது அலை அதிகரித்து கொண்டிருந்தது, O2 பற்றாக்குறை கடுமையாக மாறிக்கொண்டிருந்தது. இன்று, ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஆனால் மின்சாரம் இல்லை. பல மாவட்டங்களில் தினசரி மின்வெட்டுக்களை எதிர்கொள்கின்றன. வேதாந்தா உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டன் ஆக்ஸிஜனுக்கும் 5600 யூனிட் மின்சாரத்தை  வீணாக்குகிறது. 700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.

தினசரி சராசரியாக 30 டன் உற்பத்தி என அடிப்படையில், வேதாந்தா ஒரே நாளில் 168,000 யூனிட்களை வீணாக்குகிறது. இது ஒரு மாதத்திற்கு 1700 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. வேதாந்தாவின் குறைந்த செயல்திறன் கொண்ட அலகு இயங்குவதில் அர்த்தமில்லை. உற்பத்தி இடைநிறுத்தப்பட வேண்டும். அலகு ஸ்டாண்ட்-பை முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அவசர நிலைமை ஏற்பட்டால், அதை மறுதொடக்கம் செய்வதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்” என்று கூறினார்.

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget