மேலும் அறிய

புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

புதுச்சேரியில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்

புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுக்கும் ஜீவநதிகளோ, தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் தற்போதுவரை இல்லை. கடைமடைப் பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம்பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ஊசுடு ஏரி. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினார் என்று திருவக்கரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ., ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.275 கி.மீ., மொத்தக் கொள்ளளவு 540 மில்லியன் கன அடி. ஊசுடு ஏரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. மேலும், சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர் ஆகும்.


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும், 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும் உள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப்பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர் புதுத்துறை, காசிப்பாளையம், மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள் வரை ஏரி பரவியுள்ளது. புதுச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்று வரும் பகுதிகளுள் ஊசுடு ஏரியும் ஒன்று.


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேலே பறக்கும் அழகிய பறவைகள், அழகிய படகுப்பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும். இந்த ஏரி, புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. "ஊசுடு ஏரி புதுச்சேரி, தமிழகத்தில் விழுப்புரம் பகுதியில் பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்தன.


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

மேலும், உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக இங்கு 170 பறவை இனங்கள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிக அளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வரும் தனியார் நிறுவனம் ஒன்று ஊசுடு ஏரியை ஆய்வு செய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், அதில் 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தன. நாமக்கோழி என்ற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கிறது.


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..

ஊசுடேரிக்கு வரும் பறவைகளின் சில வகைகள் :

பூநாரை, நத்தை குத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், குள்ளத்தாரா, காட்டு வாத்து, பட்டைத்தலை வாத்து,  கருநீர்க்கோழி, சாதாரண மைனா, நீலச்சிறகி, அன்னம், வெண்தலை சிலம்பன்(பன்றிக்குருவி), குளத்துக் கொக்கு, தட்ட வாயன், ஊசிவால் வாத்து,   சாம்பல் கூழைக்கடா, குயில்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
Embed widget