மேலும் அறிய

Car Accident: காலையிலேயே சோகம்.. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய ஆம்னி.. குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் ஆட்டோ நகரம்

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தமிழகத்தின் ஆட்டோ நகரம் என்ற சிறப்பு பெயருக்கு உரியது. லாரி சார்ந்த தொழில்கள் நிறைந்த இப்பகுதி சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்த இடமாகவே இருக்கும். இதனால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லாததால் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கனவே எழுப்பப்பட்டு இருந்தது. மேலும் லாரிகளும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு லாரிகள் நிறுத்துவதற்கான இடமும் அமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 

6 பேரை பலி கொண்ட கார் விபத்து

இப்படியான நிலையில் சங்ககிரி அருகேயுள்ள சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகளான பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதில் இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இதனிடையே பிரியாவிற்கும் ராஜதுரைக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதியைச் சேர்ந்த பிரியாவின் பெற்றோரான பழனிச்சாமி, பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேர் கொண்டலாம்பட்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படாததால் தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி இன்று அதிகாலை ஆம்னி வேனில் எட்டு பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்றனர்.

அப்பொழுது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள சின்னாக்கவுண்டனூர் என்னும் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது  இதில் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் அவர் அருகில் இருந்தவர்கள்  பலத்த காயமடைந்தனர். மேலும் ஆம்னி  வாகனத்தில் பயணம் செய்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்து  விபத்து ஏற்படுத்தி சென்ற லாரி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை மேற்கொண்டார். சங்ககிரி இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க:  Crime: வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம்; கொலையில் முடிந்த பகை - கடலூரில் பயங்கரம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget