சீமான் வீட்டிற்குச் சென்ற காவலரை நோக்கி துப்பாக்கி காட்டியவர் யார்? குவியும் நாதகவினர்.!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றபோது, சீமானின் பாதுகாவலர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியதை, சீமான் வீட்டில் இருந்தவர் கிழித்த நிலையில், காவல்துறையினருக்கும் , சீமானின் பாதுகாவலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டருக்கிறது. மேலும், அப்போது பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டிருக்கிரது. யார் அந்த பாதுகாவலர்?
சீமான் வீட்டில் சம்மன்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரில், வளசரவாக்கத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் சீமான் இன்று ஆஜாரகவில்லை. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் இன்று நோட்டீஸ் ஒட்டபட்டது. அதில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
ஆனால், நோட்டீசை சீமானின் வீட்டில் இருந்தவர் கிழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஏன் கிழித்தீர்கள் என காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நோட்டீசை கிழித்தவரை கைது செய்ய காவல்துறையினரை முயன்ற போது, சீமானின் பாதுகாவலருக்கும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்படட்து.

துப்பாக்கி வைத்திருந்த பாதுகாவலர் யார்?
இதையடுத்து, நோட்டீசை கிழித்தவரையும், சீமானின் பாதுகாவலவரையும் காவல்துறையினரையும் கைது செய்ய முயன்றபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாவலரிடம் துப்பாக்கி இருந்ததை பார்த்த காவல்துறையினர் , அதை பிடுங்க முயன்றபோது பெரும் தள்ளு முள்ள ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.
இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் என தெரிய வந்துள்ளது . இவர் 18 வருடங்களாக, காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. இவரை கைது செய்யும் போது, தனது பாதுகாப்பாக துப்பாக்கி வைத்திருக்கிறேன் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

சீமான் - வழக்கு :
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை பாலியல் புகார் அளித்தார். இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதால் வீடியோ வெளியிட்டிருந்தார் , அந்த நடிகை
இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, நீதிமன்றத்தின் உத்தரவானது, சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் நடிகையின் குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் ஏழு முறை கரு கலைப்பும் நடிகை செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகை புகாரளித்தார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜயலட்சுமி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக நடிகை கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இந்நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை.






















