மேலும் அறிய

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா? - கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்

கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் போக்குவரத்து சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம், குடிநீர் அபிவிருத்தி மற்றும் நாளந்தாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய பேருந்து நிலையம் அவசியம்

கள்ளக்குறிச்சி நகரின் தற்போதைய பேருந்து நிலையம் நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், காலையும் மாலையும் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் இந்நிலையத்தில் வருகை தருகின்றனர். அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவர் வாகனங்களும், அவசர ஆம்புலன்ஸ்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது வழக்கமாகிவிட்டது. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய திருநாள்களில் இந்நிலை மேலும் மோசமடைகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பேருந்து நிலையத்தின் பரப்பளவைக் கூட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்க முடியாத நிலை தொடர்கிறது.

மாவட்ட நிர்வாகம் உருவான பிறகு பயணிகள் வருகை அதிகரிப்பு

2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் இங்கு செயல்படத் தொடங்கியதால், பொதுமக்கள் வருகை மும்மடங்காக அதிகரித்தது. இதனால், நகரத்தின் தற்போதைய பேருந்து நிலையம் மற்றும் சாலை வசதிகள் போதாது போயிருக்கின்றன. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாக புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 ஏமப்பேர் ரவுண்டானா அருகே புது பேருந்து நிலையம்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஏமப்பேர் ரவுண்டானாவில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒரு தனிநபர் தானமாக வழங்கினார். அந்த இடத்தில் ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம், குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி அமைக்கும் திட்டம் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்று, அமைச்சர் வேலு, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நவீன வசதிகளுடன் கூடிய புறநகர் பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடிக்கே இடமின்றி 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்கும் வகையில் மேம்பட்ட வடிவமைப்பில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பேருந்து நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டு, கிராவல் மணல் கொண்டு நிலத்தை சமமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வடிகால் திட்டம், நவீன கழிப்பறைகள், பயணிகள் ஓய்வு கூடங்கள், பேருந்து டிக்கெட் கவுன்டர், வீதி விளக்குகள், சிசிடிவி கண்காணிப்பு போன்ற வசதிகளும் இப்பதிவாக அமைக்கப்படுகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் தொடர்ந்த கண்காணிப்பு

இந்த புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், நகராட்சி கமிஷனர் சரவணன், மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளால் நேரில் பார்வையிட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த புறநகர் பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கினால், நகரின் மைய பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும். அதேசமயம், பயணிகள் வசதிகளும் பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டமாக புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையப்பெறுகிறது. இது நகரத்தின் போக்குவரத்துக்கு விடுவிப்பாக அமைய, பயணிகளுக்கு ஓரிடத்தில் அனைத்து வசதிகளும் கைக்கூடும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget