மேலும் அறிய

Navaratri 2023: களைகட்டும் நவராத்திரி விழா! நாவலூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட துர்கா பூஜை!

சென்னை நாவலூரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Navaratri 2023: சென்னை நாவலூரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நவராத்திரி 2023:

புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும்  நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு 9 நாள்கள் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இது வடமாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 


Navaratri 2023: களைகட்டும் நவராத்திரி விழா! நாவலூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட துர்கா பூஜை!

துர்கா பூஜை:

நவராத்திரி விழா இந்தியாவின்  அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை, அகால போதான் , துர்கோட்சப் ஆகிய பெயர்களில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சஷ்டி தொடங்கி தசமி வரை இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து துர்கா தேவியை 9 நாட்களும் பூஜை செய்வார்கள்.  பிரபல கால்பந்து ஜாம்பவான்  மரடோனா இந்த ஆண்டு  கொல்கத்தாவிற்கு வருகை தந்து துர்கா பூஜை பந்தலை திறந்துவைத்தது நினைவிருக்கலாம்.

இந்த துர்கா பூஜையானது இந்தியாவில் இருந்து வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களால் சென்னையிலும் நடத்தப்படுகிறது. சென்னை நாவலூரில், தக்‌ஷின சென்னை ப்ரபாசி கலாச்சார மையத்தின் சார்பில் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த மையத்தில் சுமார் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த துர்கா பூஜையானது கொரோனா காலத்தில் ஆன்லைனில் கொண்டாடப்பட்டது.

துர்கா பூஜை:

 இந்த ஆண்டு  நாவலூர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் நோக்கமே அனைத்து மாநில மக்களும் இணைத்து துர்கா பூஜையை கொண்டாடுவதே ஆகும். 5 நாள்கள் கொண்டாடப்படும் இவ்விழா பரதநாட்டியம், பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக செட்டிநாடு குழுமத்தின் தலைவர் முத்தையா கலந்து கொண்டார். இவ்விழாவில்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.


Navaratri 2023: களைகட்டும் நவராத்திரி விழா! நாவலூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட துர்கா பூஜை!

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் துர்கா பூஜையை கொண்டாடும் தக்‌ஷின சென்னை ப்ரபாசி கலாச்சார மையத்தை  முத்தையா வெகுவாகப் பாராட்டினார். இவ்விழாவில் துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழா அக்டோபர் 24ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாள்களில் இந்தியன் ஐடோல் புகழ் செஞ்சுட்டி தாஸ் மற்றும் சரிகமப புகழ் ராகுல் சின்ஹா ஆகியோரது நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 23ம் தேதி தாண்டியா இரவு  கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.