மேலும் அறிய

அட இப்படி ஒரு திட்டமா ! ஆந்திராவை இணைக்க புதிய ரயில்பாதை ; எங்கு தெரியுமா ?

தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு , 347 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பணிகள் வேகமெடுத்துள்ளது

விழுப்புரம் : தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு , 347 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பணிகள் வேகமெடுத்துள்ளது.

திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 347 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நகரி-திண்டிவனம் புதிய ரயில்பாதையானது தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற கிராமங்களையும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தையும் இணைக்கும்.

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில்பாதை திட்டம், 2006ம் ஆண்டு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.

மொத்தம், 180 கி.மீ., துாரம் உடைய, இந்த ரயில் பாதை, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியே நகரி செல்கிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது

போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை போன்றவற்றால், பல ஆண்டுகளாக பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில், 347 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டப்பணி வேகமெடுத்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம், ஆந்திராவை இணைக்கும் முக்கியமான ரயில் திட்டம் என்பதால், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மொத்தம், 1,000 கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும், 100 முதல் 300 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த 2024 - 25 பட்ஜெட்டில், 1,000 ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது. இதனால், திட்டப்பணியில் தாமதம் ஏற்பட்டது. நடப்பாண்டு பட்ஜெட்டில், 347.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக பணிகளை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகரி-திண்டிவனம் புதிய பாதை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதைத் திட்டங்களில் தாமதம் ஏற்படுவதற்கு நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைகள் தான் முக்கிய காரணம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், 184.45 கி.மீ. நகரி-திண்டிவனம் புதிய ரயில் பாதைத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தில் 90% கையகப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 10% பணிகள் இப்போது நடந்து வருகின்றன. 

நகரி-திண்டிவனம் புதிய பாதை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற கிராமங்களையும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தையும் இணைக்கும். இது வாலாஜாவில் சென்னை-காட்பாடி பாதையையும், நகரியில் சென்னை-ரேணிகுண்டா பாதையையும், திண்டிவனத்தில் சென்னை-விழுப்புரம் பகுதியையும் இணைக்கும், இதனால் இணைப்பு மேம்படுத்தப்படும்.

இந்த ரயில் பாதை செய்யாறு மற்றும் பாலாறு ஆறுகள், பல தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நான்கு வழி நெடுஞ்சாலைகளைக் கடந்து செல்லும். இந்தத் திட்டத்தில் வெள்ளிமேடுபேட்டை, டெல்லர், வந்தவாசி, எருமை வெட்டி மற்றும் பிற உட்பட 20 புதிய நிலையங்கள், 26 பெரிய மற்றும் 200 சிறிய பாலங்கள் கட்டப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget