மேலும் அறிய

Ma. Subramanian: 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி... யார் வந்தாலும் விவாதிக்க தயார்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி

அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது, ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து அரசியல் கட்சிகள் யார் வந்தாலும் நான் நேரடியாக விவாதிக்க தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இன்றளவு அது வடியாமல் இருந்து வருகிறது. இதனால், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் நடைபெற்ற மழைக்கால மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் 3000 க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 679 இடங்களில் நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில் சென்னையில் 679 இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200  இடங்களிலும் காஞ்சிபுரத்தில் 100 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

இந்த மருத்துவ முகாமின் மூலம் மழைக்கால நோயான மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்த்து மருத்து கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளில் 160 மருத்துவ வாகனம் மூலம் 2147 நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன் மூலம் 1,69,421 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 867 பேருக்கு காய்ச்சல் பாதிப்பும் 13,372 பேருக்கு இருமல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது” என்றார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 6 வாரம் மருத்துவ முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த வாரம் ஏழாவது வாரமாக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இன்னும் 3 வாரம் நடைபெற உள்ளது. கடந்த 6 வாரமாக 13,734  மருத்துவ முகாம் நடைபெறுகிறது.  அதன் மூலம் 6,50,585 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குடிநீரில் உள்ள குளோரின் அளவை உறுதி செய்ய வேண்டும். தட்டமை தடுப்பூசியை 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகள் முதல் 15 வயது உள்ளவர்கள் வரை தட்டமை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 

திமுக அரசின் மீது மக்கள் கோபமா..? 

மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் மக்களை சந்தித்தோம். ஆனால் மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்த காரணம் அதிமுக போன்ற கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது வேண்டும் என்று விமர்சனம் செய்பவர்கள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களின் மனசை கஷ்டப்படுத்தக் கூடாது.

அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம், சென்னையில் 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னோடு வாருங்கள் பணிகளை நேரில் காட்டுகிறேன். அரசியல் கட்சிகள் யாராக வந்தாலும் நான் நேரடியாக விவாதிக்க தயார்” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget