மேலும் அறிய

ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி - அமைச்சர் ரகுபதி

ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூஆது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம். மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மசோதாக்களை அனுப்பியிருக்கிறோம் என ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அமைச்சர் ரகுபதி பேசியுள்ளாது. 

சென்னை லயோலா கல்லூரியில், கணக்கீட்டு அறிவியலில் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் துறை சார்ந்த தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “கணினி அறிவியலின் சிறப்புகளையும், சட்டம் மற்றும் சிறை துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தேன்.

11 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இருக்கிறது. கணினி அறிவியல் அடிப்படையானது. கிராமத்தில் இருக்கக்கூடிய  விவசாயி குறுஞ்செய்தியை பார்க்கிறார் என்றால் அது கணினி அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சி. 

பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். என்னென்ன காரணங்களுக்காக மசோதாவை  திருப்பி அனுப்பினேன் என்று கூறினாரோ, அதற்குரிய தகுந்த விளக்கங்களையும் கூறி மசோதாவை நிறைவேற்றினோம். தற்பொழுது தான் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலே உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். 

தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை ? மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்,  ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழு தான் மூன்று பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பியிருக்கிறோம். 

சட்டப்பேரவைச் செயலாளருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது என்ற செய்தியாளர் கேள்விக்கு...... 

அரசின் முடிவு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palanisamy: சீமான் - பெரியார் விவகாரம்! Silent Mode-ல் EPS! பின்னணியில் கூட்டணிக் கணக்கு?Biggest Murugan Statue: Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash Kanojia

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!
ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!
Nayanthara Vs Dhanush Vs NetFlix: நயன்தாரா மீதான வழக்கு... தனுஷ் பக்கம் நீதிமன்றம்... நெட்ஃபிளிக்சுக்கு கொட்டு...
நயன்தாரா மீதான வழக்கு... தனுஷ் பக்கம் நீதிமன்றம்... நெட்ஃபிளிக்சுக்கு கொட்டு...
ஒரே ஃபோன் கால்.. பஞ்சாப் டிஎஸ்பியை அலறவிட்ட Deputy CM ..  அதிரடி காட்டிய உதயநிதி
ஒரே ஃபோன் கால்.. பஞ்சாப் டிஎஸ்பியை அலறவிட்ட Deputy CM .. அதிரடி காட்டிய உதயநிதி
Embed widget