மேலும் அறிய

ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!

தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சாவூர்: உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்களை அழிக்க வேண்டும் எனக் கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமானது. இதுபோன்று வரும் போன் கால்களை நம்பி பணத்தை இழக்காதீர்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அட்வைஸ் செய்ததுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராஜா (45). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது அவர், நான் தல்லாரகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் எனக்கூறி,  ஒரு நபரை கைது செய்த போது அவரது செல்போனில் உங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.

இந்த ஆபாச படங்கள், வீடியோக்களை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் பொய்யான தகவலை கூறியுள்ளார். மேலும் அவரை மிரட்டி ஏமாற்றும் உள்நோக்கத்தில் ரூ.7 ஆயிரத்தை பெற்றுக் கொண்டதாக ராஜா தஞ்சை சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்காணித்தனர். அப்போது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாறி, மாறி அவரது செல்போன் எண் காண்பித்தது. இதையடுத்து அந்த மர்மநபரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக், ஏட்டு இளையராஜா, போலீசார் சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த மர்ம நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கோஸ்கோட் என்னும் இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.

இவர், தனது செல்போனில் இருந்து ஏதாவது ஒரு நம்பரை தொடர்பு கொண்டு தான் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என கூறி அவர்களை மிரட்டி, அவர்களது தகவல்களை எல்லாம் அனுப்ப சொல்லி, அதில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது ஆபாச படங்கள் மற்றும் வீடியோ  உள்ளது என தன்னிடம், அதை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் எனவும், அதற்கான தொகையை அனுப்ப வேண்டும் எனவும் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து பாண்டிய பிரகாசை போலீசார் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் துறையில் இருந்து பேசி பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி பணம் கேட்டால் அதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget