மேலும் அறிய

"16 மொழிகளில் பெரியார் கருத்துகள்" அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையில் பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளுடன் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65  நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலாவது ஆண்டு 24 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றன.

பன்னாட்டு புத்தகக் காட்சி:

2வது ஆண்டில் இது 40 நாடுகளாக அதிகரித்ததோடு 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 64 நாடுகளாக உயர்ந்துள்ளது. மேலும், 1000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். 

சென்னையின் சர்வதேச புத்தகத் திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் 2500 ஆண்டுகளைக் கொண்ட சிறந்த இலக்கிய வரலாறு உள்ளது. இலக்கியம், இசை மற்றும் கலையின் மையமாக சென்னை உள்ளது.

இந்த ஆண்டு 60 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் உள்ளனர். மேலும், இலவச நிலையங்கள், இலக்கிய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளியீட்டாளர்களுக்கு வழங்குகிறோம். பொலிவியா குழந்தை புத்தகக்காட்சியை வரவேற்கிறோம்.

"சர்வதேச மொழிகளில் பெரியாரின் கருத்துக்கள் மொழியாக்கம்"

தமிழ்நாடு மகத்தான கவிஞர்களின் பார்வைகளை எப்போதும் மதித்துள்ளது. உலக மொழிகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதும், தமிழை உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதும் முக்கியமாகும். மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வதானது, 32 மொழிகளுக்கு 166 தமிழ் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் இலக்கியக் கொடை உலகளவில் பரவ வேண்டும். இது மொழிபெயர்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம். சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம்" என்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார்.

மேலும் பெரியார் குறித்த கேள்விக்கு, பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக செயல்படுத்தி வருவதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் உட்பட பல்வேறு பிற நாடுகளை சேர்ந்த பதிப்பத்தார்கள், எழுத்தாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 78 அரங்குகளும் மூன்று சிறுவர்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி திருவிழா 16ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget