மேலும் அறிய

"16 மொழிகளில் பெரியார் கருத்துகள்" அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையில் பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளுடன் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65  நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலாவது ஆண்டு 24 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றன.

பன்னாட்டு புத்தகக் காட்சி:

2வது ஆண்டில் இது 40 நாடுகளாக அதிகரித்ததோடு 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 64 நாடுகளாக உயர்ந்துள்ளது. மேலும், 1000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். 

சென்னையின் சர்வதேச புத்தகத் திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் 2500 ஆண்டுகளைக் கொண்ட சிறந்த இலக்கிய வரலாறு உள்ளது. இலக்கியம், இசை மற்றும் கலையின் மையமாக சென்னை உள்ளது.

இந்த ஆண்டு 60 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் உள்ளனர். மேலும், இலவச நிலையங்கள், இலக்கிய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளியீட்டாளர்களுக்கு வழங்குகிறோம். பொலிவியா குழந்தை புத்தகக்காட்சியை வரவேற்கிறோம்.

"சர்வதேச மொழிகளில் பெரியாரின் கருத்துக்கள் மொழியாக்கம்"

தமிழ்நாடு மகத்தான கவிஞர்களின் பார்வைகளை எப்போதும் மதித்துள்ளது. உலக மொழிகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதும், தமிழை உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதும் முக்கியமாகும். மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வதானது, 32 மொழிகளுக்கு 166 தமிழ் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் இலக்கியக் கொடை உலகளவில் பரவ வேண்டும். இது மொழிபெயர்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம். சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம்" என்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 ஆம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார்.

மேலும் பெரியார் குறித்த கேள்விக்கு, பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக செயல்படுத்தி வருவதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் உட்பட பல்வேறு பிற நாடுகளை சேர்ந்த பதிப்பத்தார்கள், எழுத்தாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 78 அரங்குகளும் மூன்று சிறுவர்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி திருவிழா 16ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget