மேலும் அறிய

நற்செய்தி..! இருசக்கர வாகனம் வாங்க மானியம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பம் செய்ய ஜூலை 15 வரை கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தகுதியான உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000/- மானியம் வழங்கும் சிறப்புத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இதற்கு முன் 30.06.2026 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, விடுபட்ட தகுதியுடைய பயன்முறையாளர்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கில், இந்த விண்ணப்பக் கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்து, வருகிற 15.07.2026 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் மற்றும் விபரம்

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் மானியம் பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

* பதிவுப் சான்று: விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 'உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்' உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

* வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நாளில் பயனாளியின் வயது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* பணி விவரம்: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் (மசூதிகள்) பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், அரபி ஆசிரியைகள், முஅத்தின் மற்றும் பிலால் உள்ளிட்ட உலமாக்களாகவும், மசூதிப் பணியாளர்களாகவும் பணியாற்றுபவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த இருசக்கர வாகன மானியம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் வழிமுறைகள்:

பயனாளிகள் இந்த மானியத் தொகையைப் பெறுவதற்கு சில முக்கிய அரசு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

1.விண்ணப்பப் படிவம் பெறுதல்: தகுதியுடைய உலமாக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு" நேரில் சென்று உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

2.ஆவணங்களை இணைத்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், நல வாரிய உறுப்பினர் அட்டை, வயதுச் சான்று, முகவரிச் சான்று, ஓட்டுநர் உரிமம் (Driving License), மற்றும் பள்ளிவாசலில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

3.முன் அனுமதி கட்டாயம்: விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் உரிய ஒப்புதலைப் பெற்ற பின்னரே பயனாளிகள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும். ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு மானியம் கோர இயலாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள்

இசுலாமியச் சமூகத்தில் ஆன்மீகப் பணியிலும், கல்விப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் உலமாக்கள், தங்களின் அன்றாடப் பணிகளுக்காகவும், ஜமாத் தொடர்பான தேவைகளுக்காகவும் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் பொருட்டு, வாகன விலையில் கணிசமான தொகையான ரூ.50,000/-ஐ அரசு நேரடியாக மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் உலமாக்களின் வாழ்வாதாரமும், பணித் திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சித்தலைவரின் முக்கிய வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் விடுபட்ட தகுதியுடைய உலமாக்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட்டிக்கப்பட்ட கால அவகாசமான 15.07.2026 மாலைக்குள்ளாக, பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," எனத் தெரிவித்துள்ளார். காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளதால், தகுதியுடைய பள்ளிவாசல் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு இந்த அரசு மானியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget