மேலும் அறிய

மயிலாடுதுறை: மரபணு மாற்ற கடுகு, செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

மரபணு மாற்ற கடுகு மற்றும் செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக சீர்காழி அருகே நிம்மேலி  கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றன. இக்கிராமசபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபை கூட்டத்தில், உணவில் மருந்தை ஒருபோதும் கலக்கக்கூடாது. அது, விவசாயத்திற்கும், இம்மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பேரழிவை ஏற்படுத்த கூடியது, ஆகையால் மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய மரபணு மாற்று கடுகு மற்றும் செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அரசு ரேசன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் தமிழ்நாடு முழுவதும் வழங்கபடும் என அரசு அறிவித்திருந்தது.


மயிலாடுதுறை: மரபணு மாற்ற கடுகு, செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

இத்திட்டம் முறையான ஆய்வுகளின்றியும் மக்களிடம் கருத்துகேட்பு நடத்தாமல் வலுகட்டாயமாக திணிப்பதாகவும், இத்திட்டத்தினை தடை செய்ய வேண்டும். இதில் கலக்கப்படும் சத்துகள்,  முருங்கை கீரையிலும், சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவிக்கின்றேம் என்றும், ஆகையால்  கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம்,  மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. ஊரட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையில் நடைபெற்று கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைதலைவர் வணிதா, கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு, சமூக ஆர்வலர் இயற்கை விவசாயி நலம் சுதாகர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

சீர்காழி அருகே 7 மணி நேரத்தில் 30 அடி நீளத்தில் 12 அடி அகலத்தில் தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள். பொதுமக்கள் பாராட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சேர்ந்தவர்கள் கயல்விழி , வினோதினி சகோதரிகள், சிறுவயது முதலே கோலம் போடுவதில் ஆர்வம் கொண்ட இவர்கள் சமீபத்தில் மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்கள் வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில், இந்திய நாட்டின் 74 -ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு இவர்கள் வீட்டில் 30 அடி நீளமும் 12 அடி அகலத்தில் மிகப் பிரமாண்டமான தேசிய கொடியை மூன்று வண்ணங்களில் வரைந்து அசத்தியுள்ளனர். 


மயிலாடுதுறை: மரபணு மாற்ற கடுகு, செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோல மாவுகளை பயன்படுத்தி  ஏழு மணி நேரம் மிக அழகாக  வண்ணம் தீட்டி நேர்த்தியாக தேசியக் கொடியை வரைந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.  மேலும், மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுருத்தும் வகையில் "மரம் வளர்ப்போம் மழை பெருவோம்" எனும் வாசகத்தையும் எழுதியுள்ளனர். இவர்கள் வரைந்த தேசிய கொடியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்து செல்கின்றனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget