மேலும் அறிய

போன வாரம் 287, இந்தவாரம் 401- மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் குறைகள்..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் 287, மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இந்தவாரம் 114 மனுக்கள் அதிகரித்து 401மனுக்கள் குவிந்து உள்ளன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், இன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் குறைகள் தொடர்பான 401 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அளித்த அனைத்து மனுக்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கி, மனுக்கள் மீது உரிய, விரைவான மற்றும் தரமான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விபரத்தையும் மனுதாரர்களுக்குத் தாமதமின்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பல்வேறு கோரிக்கைகள் - மனுக்களின் எண்ணிக்கை விவரம்

பொதுமக்கள் அளித்த 401 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மனுக்களே அதிக அளவில் பெறப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 163 மனுக்கள்

* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல்: 31 மனுக்கள்

* தொழிற்கடன் வழங்கக் கோரி: 32 மனுக்கள்

* முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை: 21 மனுக்கள்

* அடிப்படை வசதி கோரி: 20 மனுக்கள்

* ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி: 18 மனுக்கள்

* சட்டம் ஒழுங்கு தொடர்பாக: 14 மனுக்கள்

* மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், வங்கிக் கடன், உதவித்தொகை: 13 மனுக்கள்

* தொழிலாளர் நலன் தொடர்பாக: 13 மனுக்கள்

* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனை: 12 மனுக்கள்

* இலவச கான்கிரீட் வீடு வேண்டி: 11 மனுக்கள்

* வேலைவாய்ப்பு கோரி: 10 மனுக்கள்

* குடும்ப அட்டை தொடர்பாக: 10 மனுக்கள்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக: 8 மனுக்கள்

* பல்வேறு புகார்கள்: 25 மனுக்கள்

மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டு, அவை மீது உரிய நடவடிக்கையைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறைதீர்க்கும் கூட்டத்தின் முக்கிய அங்கமாக, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு சுமார் ரூ.86,820 மதிப்பிலான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன

* சிறப்பு சக்கர நாற்காலிகள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.9,750 வீதம்.

 * மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.6,820 வீதம்.

 * திறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்): செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.17,000 மதிப்பில்.

 * காதொலிக் கருவி: 1 பயனாளிக்கு, ரூ.3,250 மதிப்பில்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தி வாழும் நபர்களுக்கான மறுவாழ்வு நிதி மூலம் பெட்டி கடை வைப்பதற்கு 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் நிதியுதவியும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியருடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியரகம் இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. கடந்த வாரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 287 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 401 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Embed widget