மேலும் அறிய

போன வாரம் 287, இந்தவாரம் 401- மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் குறைகள்..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் 287, மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இந்தவாரம் 114 மனுக்கள் அதிகரித்து 401மனுக்கள் குவிந்து உள்ளன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், இன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் குறைகள் தொடர்பான 401 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அளித்த அனைத்து மனுக்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கி, மனுக்கள் மீது உரிய, விரைவான மற்றும் தரமான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விபரத்தையும் மனுதாரர்களுக்குத் தாமதமின்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பல்வேறு கோரிக்கைகள் - மனுக்களின் எண்ணிக்கை விவரம்

பொதுமக்கள் அளித்த 401 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மனுக்களே அதிக அளவில் பெறப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 163 மனுக்கள்

* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல்: 31 மனுக்கள்

* தொழிற்கடன் வழங்கக் கோரி: 32 மனுக்கள்

* முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை: 21 மனுக்கள்

* அடிப்படை வசதி கோரி: 20 மனுக்கள்

* ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி: 18 மனுக்கள்

* சட்டம் ஒழுங்கு தொடர்பாக: 14 மனுக்கள்

* மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், வங்கிக் கடன், உதவித்தொகை: 13 மனுக்கள்

* தொழிலாளர் நலன் தொடர்பாக: 13 மனுக்கள்

* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனை: 12 மனுக்கள்

* இலவச கான்கிரீட் வீடு வேண்டி: 11 மனுக்கள்

* வேலைவாய்ப்பு கோரி: 10 மனுக்கள்

* குடும்ப அட்டை தொடர்பாக: 10 மனுக்கள்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக: 8 மனுக்கள்

* பல்வேறு புகார்கள்: 25 மனுக்கள்

மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டு, அவை மீது உரிய நடவடிக்கையைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறைதீர்க்கும் கூட்டத்தின் முக்கிய அங்கமாக, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு சுமார் ரூ.86,820 மதிப்பிலான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன

* சிறப்பு சக்கர நாற்காலிகள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.9,750 வீதம்.

 * மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.6,820 வீதம்.

 * திறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்): செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.17,000 மதிப்பில்.

 * காதொலிக் கருவி: 1 பயனாளிக்கு, ரூ.3,250 மதிப்பில்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தி வாழும் நபர்களுக்கான மறுவாழ்வு நிதி மூலம் பெட்டி கடை வைப்பதற்கு 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் நிதியுதவியும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியருடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியரகம் இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. கடந்த வாரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 287 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 401 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
‘அதிமுகவுடன் ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
‘ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget