மேலும் அறிய

மயிலாடுதுறை: பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்..! 14 இடங்களில் பறவைகள் இனம் கண்டுபிடிப்பு, பாதுகாப்புக்கு உதவும் தரவுகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் 2025-26-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் (Synchronised Wetland Birds Census) கணக்கெடுப்பு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் கணக்கெடுப்பு துவக்க விழா மற்றும் பயிற்சி நிகழ்வுகள் 

திருச்சி வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் காஞ்சனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வுகள் திட்டமிடப்பட்டன.
கணக்கெடுப்பின் முதல் நாளான டிசம்பர் 27 அன்று, ஏவிசி (AVC) கலைக் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பாஸ்கரன் தலைமை ஏற்று இந்தப் பணியைத் துவக்கி வைத்தார். சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், பறவைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை அறிவியல் பூர்வமாக கணக்கிடும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.


தொடர்ந்து, இணைப் பேராசிரியர் பாண்டியன் பவர் பாயிண்ட் (Power Point) விளக்கக்காட்சி மூலம் பறவைகளின் வகைகள், அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் வலசை வரும் பறவைகளை கண்டறியும் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். உதவிப் பேராசிரியர் முனைவர் மூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

மாவட்டத்தின் 14 இடங்களில் தீவிர களப்பணி

இரண்டாம் நாளான டிசம்பர் 28 அன்று, சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்புத் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ஏவிசி கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
இந்தக் குழுக்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளான:

* பெருந்தோட்டம் ஏரி

*புதுப்பட்டினம் அலையாத்திக் காடுகள் (Mangroves)

* திருவாலி ஏரி

* திருமுல்லைவாசல் உப்பனாறு

 * தரங்கம்பாடி மற்றும் சின்னங்குடி

உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 14 முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த களப்பணியின் போது வனப்பணியாளர்கள் செல்வம், மோ.அனந்தீஸ்வரன் மற்றும் களப்பணியாளர்கள் குழுக்களுக்குத் தகுந்த வழிகாட்டிகளாக இருந்து உதவினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்

இந்தக் கணக்கெடுப்பின் போது ஏராளமான உள்நாட்டு நீர்வாழ் பறவைகளும், வெளிநாடுகளில் இருந்து பருவகால மாற்றத்திற்காக வலசை வந்துள்ள (Migratory Birds) பறவைகளும் கண்டறியப்பட்டன. ஏரி மற்றும் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் குறித்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது எதிர்காலத்தில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு பணி நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற கல்லூரி மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக வனவர்  அனந்தீஸ்வரன் நன்றியுரை ஆற்றினார். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், இந்த ஆண்டுக்கான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Karthigai Deepam: புலம்பும் பரமேஸ்வரி.. காளியம்மாள் சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புலம்பும் பரமேஸ்வரி.. காளியம்மாள் சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
Embed widget