மேலும் அறிய

மயிலாடுதுறை: பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்..! 14 இடங்களில் பறவைகள் இனம் கண்டுபிடிப்பு, பாதுகாப்புக்கு உதவும் தரவுகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் 2025-26-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் (Synchronised Wetland Birds Census) கணக்கெடுப்பு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் கணக்கெடுப்பு துவக்க விழா மற்றும் பயிற்சி நிகழ்வுகள் 

திருச்சி வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் காஞ்சனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வுகள் திட்டமிடப்பட்டன.
கணக்கெடுப்பின் முதல் நாளான டிசம்பர் 27 அன்று, ஏவிசி (AVC) கலைக் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பாஸ்கரன் தலைமை ஏற்று இந்தப் பணியைத் துவக்கி வைத்தார். சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், பறவைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை அறிவியல் பூர்வமாக கணக்கிடும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.


தொடர்ந்து, இணைப் பேராசிரியர் பாண்டியன் பவர் பாயிண்ட் (Power Point) விளக்கக்காட்சி மூலம் பறவைகளின் வகைகள், அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் வலசை வரும் பறவைகளை கண்டறியும் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். உதவிப் பேராசிரியர் முனைவர் மூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

மாவட்டத்தின் 14 இடங்களில் தீவிர களப்பணி

இரண்டாம் நாளான டிசம்பர் 28 அன்று, சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்புத் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ஏவிசி கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
இந்தக் குழுக்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளான:

* பெருந்தோட்டம் ஏரி

*புதுப்பட்டினம் அலையாத்திக் காடுகள் (Mangroves)

* திருவாலி ஏரி

* திருமுல்லைவாசல் உப்பனாறு

 * தரங்கம்பாடி மற்றும் சின்னங்குடி

உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 14 முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த களப்பணியின் போது வனப்பணியாளர்கள் செல்வம், மோ.அனந்தீஸ்வரன் மற்றும் களப்பணியாளர்கள் குழுக்களுக்குத் தகுந்த வழிகாட்டிகளாக இருந்து உதவினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்

இந்தக் கணக்கெடுப்பின் போது ஏராளமான உள்நாட்டு நீர்வாழ் பறவைகளும், வெளிநாடுகளில் இருந்து பருவகால மாற்றத்திற்காக வலசை வந்துள்ள (Migratory Birds) பறவைகளும் கண்டறியப்பட்டன. ஏரி மற்றும் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் குறித்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது எதிர்காலத்தில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு பணி நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற கல்லூரி மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக வனவர்  அனந்தீஸ்வரன் நன்றியுரை ஆற்றினார். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், இந்த ஆண்டுக்கான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
Namakkal power cut: நாமக்கலில் நாளை(25-05-2026) மின் தடை.. எந்தெந்த இடங்களில் முழு விவரம் இதோ!
Namakkal power cut: நாமக்கலில் நாளை(25-05-2026) மின் தடை.. எந்தெந்த இடங்களில் முழு விவரம் இதோ!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget